உலக செய்திகள்
இரச்சனைகளுக்கு இடையிலும் மாலத்தீவுகளுக்கு இந்தியா உதவுமா? பின்னணி என்ன?
Diplomatic Row Of India And Maldives: இரு நாடுகளுக்கும் இடையில் பிரச்சனை இருந்தாலும், திறமையான தொழில்நுட்ப பணியாளர்களை கொடுத்து மாலத்தீவுகளுக்கு உதவும் இந்தியா! சுவாரசிய பின்னணி…
வேலை நேரம் முடிந்தபின் நிறுவனத்தின் அழைப்பை நிராகரிக்க உரிமை… ஆஸ்திரேலியாவில் வருகிறது புதிய சட்டம்
ஊழியர்கள் தங்கள் பணி நேரம் முடிந்து வீட்டிற்கு சென்றபிறகு, சில சமயங்களில் மேலதிகாரிகள் தொடர்பு கொண்டு வேலை தொடர்பான தகவல்களை கேட்பது உண்டு. சில சமயங்களில் மீண்டும் அலுவலகம் வந்து அவர்கள் கேட்கும் தகவல்களை வழங்கவேண்டிய நிர்பந்தமும் ஏற்படுகிறது. இதேபோல் வார விடுமுறை நாட்களிலும் நிறுவனம் அழைத்தால் வேலை செய்ய வேண்டிய சூழ்நிலை உள்ளது. அப்படிப்பட்ட சூழ்நிலையை எதிர்கொள்ளும் தொழிலாளர்கள், வீட்டிற்கு சென்றபிறகும் அலுவலகத்தைப் பற்றியே சிந்திக்கவேண்டிய நிலை உள்ளது. வேலை இல்லாத நேரத்தில் அமைதியாக பொழுதை … Read more
தேர்தல் வாக்குப்பதிவு நாளில் நாட்டில் மொபைல் நெட்வொர்க்கை முடக்கிய பாகிஸ்தான்!
Pakistan Elections & Mobile Network: குடிமக்களின் உரிமைகளை வேண்டுமென்றே நசுக்கி ஜனநாயகத்தை கேலி கூத்தாக்கும் நிர்வாகம் என கடும் கண்டனங்களுடன் நடைபெற்ற பாகிஸ்தான் பொதுத்தேர்தல்!
3 Seconds Only ‛Review: Chinese Woman Earning Rs.120 Crores Weekly | 3 நொடி… ரூ.120 கோடி…: ‛‛ரிவ்யூ செய்து ‛‛காசு பார்க்கும் சீனப்பெண்
பீஜிங்: சீனாவில் சமூக வலைதளங்களில் ஒரு பொருளை 3 நொடிகள் மட்டுமே ‛ரிவ்யூ’ செய்து வாரத்திற்கு இந்திய மதிப்பில் ரூ.120 கோடி வருமானம் ஈட்டுகிறார் சீனப்பெண். சமூக வலைதளங்களின் வளர்ச்சிக்கு பிறகு, அதன் பயனாளர்கள் பல்வேறு வகைகளில் வருமானம் ஈட்டி வருகின்றனர். அதனையே தொழில் ஆகவும் மாற்றி உள்ளனர். அந்த வகையில் சீனாவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் வாரந்தோறும் ரூ.120 கோடி சம்பாதிக்கிறார். சீனாவைச் சேர்ந்தவர் ஜெங் ஷியாங் ஷியாங். இவர், சீனாவின் ‛ டூயின்’ சமூக … Read more
அண்டார்டிகாவில் ஆராய்ச்சி பணிகள்: நவீன மையத்தை நிறுவிய சீனா
பீஜிங், பனிசூழ்ந்த தனி கண்டமாக விளங்கும் அண்டார்டிகாவில் ஆராய்ச்சி பணிகள் மேற்கொள்ள உலகநாடுகள் போட்டிபோட்டு வருகின்றன. இந்தநிலையில் அண்டார்டிகாவில் புதிய ஆராய்ச்சி மையத்தை சீனா நிறுவியுள்ளது. கிழக்கு அண்டார்டிகாவின் ராஸ் கடலோர பகுதியில் நாட்டின் 5-வது ஆராய்ச்சி மையத்தை சீனா கட்டி முடித்துள்ளது. செயற்கைகோள் நிலையம், கண்காணிப்பகம் ஆகிய நவீன வசதிகளை இந்த புதிய ஆராய்ச்சி மையம் கொண்டுள்ளது. ‘குயின்லிங்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த நிலையம் தன்னுடைய ஆராய்ச்சி பணியை தொடங்க உள்ள நிலையில் சீன அதிபர் … Read more
உடலுறவு… 14 வயது மாணவன் வீட்டில் பலமுறை எகிறி குதித்த ஆசிரியை – 50 ஆண்டுகள் சிறை!
World Bizarre News: அமெரிக்காவின் 14 வயது சிறுவனின் வீட்டிற்கு யாருக்கும் தெரியாமால் சென்று பலமுறை உடலுறவு வைத்துக்கொண்ட குற்றத்திற்காக ஆசிரியை ஒருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
பாகிஸ்தானில் நாடாளுமன்ற தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது – இணைய சேவை முடக்கம்
இஸ்லாமாபாத், வன்முறை, அரசியல் நிச்சயமற்ற தன்மை, பொருளாதார நெருக்கடி போன்ற சவால்களுக்கு மத்தியில் பாகிஸ்தானில் இன்று நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது.வாக்குப்பதிவு காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. வாக்குச் சாவடிக்கு வாக்காளர்கள் வந்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் தரவுகளின்படி மொத்தம் 12 கோடியே 85 லட்சத்து 85 ஆயிரத்து 760 பேர் வாக்களிக்க தகுதியுடைவர்கள் என … Read more
பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தல்: ஈரான், ஆப்கன் எல்லைகள் மூடல்
கராச்சி: பாகிஸ்தானில் நடைபெற்று வரும் நாடாளுமன்றத் தேர்தலையொட்டி பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு பாகிஸ்தானில் உள்ள ஈரான், ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதிகள் மூடப்படுவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் நேற்று (பிப்.07) சுயேச்சை வேட்பாளர் அஸ்ஃபந்த்யார் காகரின் தேர்தல் அலுவலகத்துக்கு வெளியே சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இதில் 14 பேர் உயிரிழந்தனர். 26 பேர் காயம் அடைந்தனர். இதனைத் தொடர்ந்து கிலா சைபுல்லா நகரில் ஜேயுஐ – எஃப் கட்சி அலுவலகத்துக்கு வெளியேயும் குண்டு … Read more
வன்முறை, பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் பாகிஸ்தானில் இன்று நாடாளுமன்ற தேர்தல்
இஸ்லாமாபாத், வன்முறை, அரசியல் நிச்சயமற்ற தன்மை, பொருளாதார நெருக்கடி போன்ற சவால்களுக்கு மத்தியில் பாகிஸ்தானில் இன்று நாடாளுமன்ற தேர்தல் நடக்க உள்ளது. காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை தேர்தல் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் தரவுகளின்படி மொத்தம் 12 கோடியே 85 லட்சத்து 85 ஆயிரத்து 760 பேர் வாக்களிக்க தகுதியுடைவர்கள் என தெரிகிறது. இவர்கள் வாக்களிப்பதற்காக நாடு முழுவதும் 9 லட்சத்து 7 ஆயிரத்து 675 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. … Read more