'வழக்கமான நடைமுறைதான்' – புதிய வரைபடம் தொடர்பாக சீனா விளக்கம்

பீஜிங், இந்தியாவின் அருணாசல பிரதேசம், சர்ச்சைக்குரிய அக்சாய் சின் ஆகிய பகுதிகளை தங்கள் நாட்டுடன் இணைத்து புதிய வரைபடத்தை சீனா வெளியிட்டுள்ளது. சீனாவின் இந்த வரைபடத்தை நிராகரித்த இந்தியா, இது தொடர்பாக அந்த நாட்டுக்கு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. இந்தியாவின் கண்டனம் தொடர்பாக சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் வாங் வென்பின்னிடம் நேற்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதிலளிக்கையில், ‘சீனாவின் தேசிய வளத்துறை அமைச்சகம் 2023-ம் ஆண்டுக்கான புதிய வரைபடத்தை வெளியிட்டது. சீன … Read more

அதிகாலையில் நடந்த கோரம் : தீக்கிரையான 73 உயிர்கள்.. தென் ஆப்ரிக்காவை உலுக்கிய சோகம்!

தென் ஆப்ரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகர் மக்களுக்கு இன்றைய காலை சோகமான நாளாக விடிந்தது. நகரில் உள்ள ஒரு 5 அடுக்கு மாடிக் கட்டடத்தில் சுமார் 200 பேர் இருந்துள்ளனர். இந்த நிலையில் நேற்றிரவு அடுக்குமாடி குடியிருப்பில் தீடிரென தீப்பற்றி மளமளவென எரிய ஆரம்பித்தது. தீ பரவுவதை கண்ட மக்கள், வெளியே தப்பிக்க முயற்சி மேற்கொண்டனர். ஆனால், கட்டிடத்தின் உள்ளே இருந்த கேட் பூட்டப்பட்டிருந்ததால் மக்களால் வெளியேற முடியவில்லை. இதனால் உள்ளே இருந்த மக்கள் காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என … Read more

தென்னாப்பிரிக்காவில் பயங்கர தீ விபத்து! 63 பேர்ல் பலி!

தென்னாப்பிரிக்காவின் மிகப்பெரிய நகரமான ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள பல மாடிக் கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 63 பேர் உயிரிழந்தனர்

தென் ஆப்ரிக்காவில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து: 63 பேர் பலி; 43 பேர் காயம்| 63 Killed After Massive Fire At 5-Storey Building In S Africas Johannesburg

ஜோகன்னஸ்பர்க்: தென்ஆப்ரிக்காவில் ஜோகன்னஸ்பர்க் நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 63 பேர் உயிரிழந்தனர். மேலும் 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். தென்ஆப்ரிக்காவில் ஜோகன்னஸ்பர்க் நகரில் உள்ள ஐந்து மாடிக் கட்டடத்தில் இன்று(ஆகஸ்ட் 31) தீ விபத்து ஏற்பட்டது. புகைமண்டலமாக மாறிய குடியிருப்பில் சிக்கி, சுவாச கோளாறு ஏற்பட்டு 40க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஏற்பட்டுள்ள சுவாச பிரச்னையை சரி செய்ய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தீயில் கருகி 63 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். … Read more

காபோன் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய ராணுவம்: வீட்டு காவலில் வைக்கப்பட்டார் அதிபர்| Gabon military seizes power: president placed under house arrest

தக்கார்: காபோன் நாட்டில், அதிபர் தேர்தலில் அலி போங்கோ ஒண்டிம்பா வெற்றி பெற்றது செல்லாது என அறிவித்த அந்நாட்டு ராணுவம், ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி உள்ளதாக அறிவித்துள்ளது. மத்திய ஆப்ரிக்க நாடான காபோனில், காபோனீஸ் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த, அலி போங்கோ ஒண்டிம்பா, 64, என்பவர், 14 ஆண்டுகளாக அதிபராக பதவி வகித்து வந்தார். இவரது தந்தை உமர் போங்கோ ஒண்டிம்பா, 41 ஆண்டுகளாக காபோனை ஆட்சி செய்து வந்தார். இவரது மரணத்துக்கு பின், 2009 அக்டோபரில் … Read more

பாகிஸ்தானில் மிதமான நிலநடுக்கம்| Moderate earthquake in Pakistan

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் இருந்து 193 கிமீ தொலைவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் இருந்து 193 கிமீ தொலைவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள் Advertisement

இன்று மலேசிய சுதந்திர தினம்!| Today is Malaysian Independence Day!

கோலாலம்பூர்: ஆங்கிலேய பேரரசின் காலனித்துவ ஆட்சியிலிருந்து மலாயா கூட்டமைப்பானது 1957 ஆகஸ்ட் 31 அன்று சுதந்திரம் அடைந்ததை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 31ம் தேதி மலேசிய சுதந்திர தினமாக கொண்டாடப்படுகிறது. இது அந்நாட்டின் மலாயா கூட்டமைப்பின் சுதந்திரப் பிரகடனத்தை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. கோலாலம்பூர்: ஆங்கிலேய பேரரசின் காலனித்துவ ஆட்சியிலிருந்து மலாயா கூட்டமைப்பானது 1957 ஆகஸ்ட் 31 அன்று சுதந்திரம் அடைந்ததை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் … Read more

ரஷ்யாவின் தாக்குதலை எதிர்கொள்ள உக்ரைனுக்கு ரூ.2,000 கோடி ஆயுதம் அனுப்பும் அமெரிக்கா

வாஷிங்டன்: ரஷ்யா – உக்ரைன் இடையிலான போர் ஒன்றரை ஆண்டுகளாக தொடர்ந்து வருகிற நிலையில், உக்ரைனுக்கு போரில் உதவ 250 மில்லியன் டாலர் (ரூ.2,000 கோடி) மதிப்பில் கூடுதலாக ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் வழங்குவதாக அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. நிலக்கரி சுரங்க பயன்பாட்டுக்கான உபகரணங்கள், இயந்திரத் துப்பாக்கிகள், ஏவுகணைகள், ஆம்புலன்ஸ், போர் மருத்துவ உபகரணங்கள், உதிரி பாகங்கள் உள்ளிட்டவை வழங்கப்பட உள்ளன. கடந்த ஆண்டு பிப்ரவரியில் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது. உக்ரைனின் அடிப்படை உள்கட்டமைப்பை … Read more