கட்டுப்பாட்டை இழந்து கடலில் தலைகுப்புறக் கவிழ்ந்த சிறிய விமானம்- விமானி உயிர் தப்பினார்

இங்கிலாந்தில் கட்டுப்பாட்டை இழந்த சிறிய விமானம் ஒன்று கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. சவுத் வேல்ஸ் பகுதியில் போர்த்காவ்ல் என்ற இடத்தில் இலகு ரக விமானம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து பறந்தது. பாறைகள் நிறைந்த அந்தப் பகுதியைத் தவிர்த்த விமானி கடலின் மேற்பரப்பில் பறக்க முயற்சிக்கும் போது, விமானம் கடலுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானது. விமானம் தலைகுப்புற விழுந்த நிலையில்,உயிர்தப்பிய விமானி நீந்தி கரையை அடைந்தார். தகவலறிந்த காவல் துறையினர் படகு மூலம் விமானத்தை அடையும் நேரத்தில், விமானத்தின் பெரும் … Read more

அணு ஆயுதங்களை வேகமாக விரிவுபடுத்துகிறது சீனா: எஸ்ஐபிஆர்ஐ அறிக்கையில் தகவல்

புதுடெல்லி: சீனா தனது அணு ஆயுதங்களை தொடர்ந்து வேகமாக விரிவுபடுத்தி வருகிறது என ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி மையம் (எஸ்ஐபிஆர்ஐ) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எஸ்ஐபிஆர்ஐ நேற்று முன்தினம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சீனாவிடம் கடந்த 2022-ம் ஆண்டு ஜனவரி மாதம் 350 அணு ஆயுதங்கள் இருந்தன. தற்போது சீனாவிடம் உள்ள அணு ஆயுதங்களின் எண்ணிக்கை 410 ஆக உயர்ந்துள்ளது. பாகிஸ்தானிடம் 170 அணு ஆயுதங்கள் உள்ளன. இந்தியாவிடம் 164 அணு ஆயுதங்கள் உள்ளன. 2030-ம் ஆண்டுக்குள் … Read more

Case of hoarding government documents: Trump indicted | கோர்டில் ஆஜரானார் டிரம்ப்: குற்றச்சாட்டு பதிவு

புளோரிடா,: அரசு ரகசிய ஆவணங்களை தனது பங்களா குளியல் அறையில் பதுக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் மியாமி கோர்ட்டில் ஆஜராக வந்த முன்னாள் அதிபர் டெனால்டு டிரம்ப் ,76 , அவரது உதவியாளர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க முன்னாள் அதிபர் டெனால்டு டிரம்ப்,76, இவர் தன் பதவி காலத்தின் போது அரசின் முக்கிய ரகசிய ஆவணங்களை, தன் தனிப்பட்ட பங்களாவில், குளியலறை உள்ளிட்ட இடங்களில் பதுக்கி வைத்திருந்ததாக, புகைப்பட ஆதாரங்கள் வெளியாகின. அமெரிக்க … Read more

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் சொந்த ஊரில் ரஷிய படைகள் தாக்குதல் – 10 பேர் உயிரிழப்பு

கீவ், கடந்த ஆண்டு பிப்ரவரி 24-ந்தேதி தொடங்கிய உக்ரைன்-ரஷியா இடையிலான போர் ஓராண்டுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இந்த போரில் ரஷியாவின் தாக்குதல்களை மேற்கத்திய நாடுகளின் ராணுவ உதவியோடு உக்ரைன் எதிர்கொண்டு வருகிறது. ரஷிய படைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட ஏழு கிராமங்களை மீட்டுள்ளதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் சொந்த ஊரில் ரஷியா ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. உக்ரைனின் மையப்பகுதியில் இருக்கும் கிரைவி ரிஹ் என்ற இடத்தில் … Read more

புளோரிடா கடற்கரையில் ஆனந்த குளியலிட்ட கரடிக் குட்டி நீந்தி வந்ததைக் கண்டு வியப்படைந்த மக்கள்…!

அமெரிக்காவில் புளோரிடா கடற்கரையில், ஒரு கரடிக் குட்டி, ஆனந்த குளியலிட்டதைக் கண்டு மக்கள் வியப்படைந்தனர். புளோரிடாவில் கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், ஞாயிற்றுக்கிழமை மக்கள் பலர் கடற்கரையில் குளித்துக் கொண்டிருந்தனர். அச்சமயம் கரடிக் குட்டி ஒன்று, தண்ணீரில் நீந்தி வந்ததை மக்கள் கண்டனர். மக்களை கண்டதும் அச்சமடைந்த கரடி, நீரில் இருந்து வெளியேறி மணல் திட்டுகளை நோக்கி ஓட்டம் பிடித்து அங்குள்ள புதரில் சென்று மறைந்தது. அப்பகுதியில் நிறைய கரடிகள் இருப்பதாகவும், அவ்வப்போது கரடிகள் இது … Read more

Donate and save lives: Today is World Blood Donation Day.. | உதிரம் கொடுத்து உயிர்காப்பேம்: இன்று உலக ரத்த தான தினம்..

ரத்த தானத்தின் அவசியத்தை வலியுறுத்தி உலக சுகாதார நிறுவனம் சார்பில் ஜூன் 14ல் உலக ரத்த தான தினம் கடைபிடிக்கப்படுகிறது. ‘ ரத்தம் கொடுங்கள்; பிளாஸ்மா கொடுங்கள்; வாழ்க்கையை பகிர்ந்து கொள்ளுங்கள்; அடிக்கடி பகிர்ந்து கொள்ளுங்கள்’ என்பது இந்தாண்டு மையக்கருத்து. நல்ல உடல்நிலையில் உள்ள 18 — 65 வயதுடைய எவரும் ரத்த தானம் செய்யலாம். உடல் எடை குறைந்தது 50 கிலோ இருக்க வேண்டும். ரத்த அழுத்தம், நாடித்துடிப்பு, ஹீமோகுளோபின் ஆகியவற்றை சோதனை செய்த பின் … Read more

ரஷியாவின் அறிவிப்பால் பாபா வங்காவின் கணிப்பு உண்மையாக போகிறதா? அதிர்ச்சியில் உலகநாடுகள்

மாஸ்கோ, உக்ரைன் மீது ரஷியா போர் நடத்தி வரும் நிலையில், உக்ரைனின் அண்டை நாடான பெலாரஸ் அதிபருடன், புதின் ஆலோசனை நடத்தினார். பெலாரஸ் நாட்டில் அணு ஆயுதங்களை வைப்பதற்கான கட்டமைப்புகள் ஜூலை மாத தொடக்கத்தில் நிறைவு பெறும் என தெரிவிக்கப்பட்டது. இந்த பணிகள் நிறைவு பெற்றவுடன் ரஷிய அணு ஆயுதங்கள் பெலாரஸ் நாட்டிற்கு வழங்கப்படும் என புதின் தெரிவித்துள்ளார். ரஷியாவின் இந்த அறிவிப்பு உலக நாடுகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் உக்ரைன் உள்ளிட்ட அதன் ஆதரவு … Read more

Nepal President Chest Pain: Hospital Admitted | நேபாள அதிபருக்கு நெஞ்சுவலி: மருத்துவமனையில் அட்மிட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் காத்மாண்டு: நெஞ்சு வலி காரணமாக நேபாள அதிபர் ராம் சந்திரா பவுதெல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேபாளம் அதிபராக இருந்த பித்யா தேவி பணடாரி பதவி காலம் நிறைவடைந்ததைடுத்து. கடந்த மார்ச் மாதம் நடந்த தேர்தலில் புதிய அதிபராக ராம் சந்திரா பவுதெல்,78 தேர்வு செய்யப்பட்டார் இன்று காலை அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதையடுத்து தலைநகர் காத்மாண்டுவில் உள்ள சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். தற்போது … Read more

ரஷியா மேலும் ஒரு அணையை குண்டு வீசி தகர்த்துள்ளது – உக்ரைன் பரபரப்பு குற்றச்சாட்டு

கீவ், உக்ரைன் -ரஷியா இடையிலான போர் ஒரு வருடத்தை கடந்து நீடித்து வருகிறது. ரஷியாவின் தாக்குதல்களை உக்ரைன், தனது நட்பு நாடுகளின் உதவிகளோடு எதிர்கொண்டு வருகிறது. ஆக்கிரப்புப் பகுதிகளில் எதிா்த் தாக்குதல் நடத்தி தங்களது படையினா் முன்னேறி வருவதைத் தடுப்பதற்காக இந்தச் செயலில் ரஷியா ஈடுபட்டதாக உக்ரைன் ராணுவம் கூறியுள்ளது. இது குறித்து கொசான் பிராந்திய படைப் பிரிவு செய்தித் தொடா்பாளா் வேலரி ஷொஷென் கூறியதாவது: மோக்ரி யாலி நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணையை ரஷிய ஆக்கிரமிப்புப் … Read more

இந்திய அரசு மீது டுவிட்டர் முன்னாள் சிஇஓ குற்றச்சாட்டு..!

வாஷிங்டன், 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெறுமாறு மத்திய அரசிடம் கோரிக்கை வைத்து விவசாயிகள் தலைநகர் டெல்லியில் போராட்டம் நடத்தினர். கடந்த 2020-2021 ஆம் ஆண்டு ஓராண்டுக்கு மேல் விவசாயிகளின் போராட்டம் நீடித்தது. இதையடுத்து விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்தார். அதனபின்னர் விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டனர். இந்த நிலையில், விவசாயிகள் போராட்டம் முடிந்து ஒரு ஆண்டுகள் கழித்து இந்திய அரசின் மீது டுவிட்டர் நிறுவனத்தின் முன்னாள் சிஇஓ … Read more