ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 15 மில்லியன் இழப்பீடு – இலங்கை முன்னாள் அதிபர் சிறிசேனா வழங்கினார்

கொழும்பு, இலங்கை தலைநகர் கொழும்புவில் கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21-ந்தேதி ஈஸ்டர் பண்டிகை அன்று அங்குள்ள 3 கிறிஸ்தவ தேவாலயங்கள், 3 ஓட்டல்கள் மற்றும் ஒரு குடியிருப்பு வளாகத்தில் அடுத்தடுத்து தற்கொலைப்படை தாக்குதல் நடந்தது. இந்த தாக்குதலில் 11 இந்தியர்கள் உள்பட 258 பேர் உயிரிழந்தனர். சுமார் 500 பேர் காயமடைந்தனர். இலங்கையில் இயங்கிவரும் தேசிய தவ்ஹீத் ஜமாத் என்ற பயங்கரவாத அமைப்பு இந்த கொடூர தாக்குதலுக்கு பொறுப்பேற்றது. இது தொடர்பான வழக்கில், கடந்த … Read more

Easter Bomb Blast: First installment of compensation paid by former Sri Lankan president | ஈஸ்டர் குண்டு வெடிப்பு : முதல் தவணை இழப்பீடு வழங்கினார் முன்னாள் இலங்கை அதிபர்

கொழும்பு:இலங்கையில், 2019 ஈஸ்டர் குண்டு வெடிப்பில் பாதிக்கப்பட்டோர் குடும்பத்தினருக்கு, தன் சொந்த பணத்தில் இருந்து 2.60 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கும்படி, முன்னாள் அதிபர் மைத்ரிபால சிரிசேனவுக்கு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், முதல் தவணையாக 40 லட்சம் ரூபாயை சமீபத்தில் வழங்கினார். கடந்த 2019, ஏப்., 21ம் தேதி ஈஸ்டர் பண்டிகை தினத்தின் போது, இலங்கையில் உள்ள மூன்று தேவாலயங்கள், மூன்று நட்சத்திர ஹோட்டல்களில் குண்டு வெடித்தது. ஐ.எஸ்., அமைப்புடன் தொடர்புடைய ஒன்பது பயங்கரவாதிகள் … Read more

"Periods" வந்ததா என பெண்களை காட்ட சொல்லி கொடுமை.. தனியார் கம்பெனியின் அட்டூழியம்!

யாருக்கு மாதவிடாய் உள்ளது என்பதை தெரிந்து  கொள்வதற்காக வேலை செய்யும் பெண்களுக்கு  அநீதி இழைக்கப்பட்ட சம்பவம் உலகத்திலேயே உலுக்கி உள்ளது.

Repeated Missile Tests: North Korea Addicted | மீண்டும் மீண்டும் ஏவுகணை சோதனை: வடகொரியா அடாவடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பியாங்யாங்: ஜப்பான் கடல்பகுதியில் அணு ஆயுதங்களை தாங்கி செல்லும் ஏவுகணை சோதனையை வடகொரியா நிகழ்த்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க உள்ளிட்ட நாடுகளின் எச்சரிகையை மீறி வடகொரியா மீண்டும் மீண்டும் ஏவுகணை சோதனைகளை நிகழ்த்தி வருகிறது. இந்நிலையில் இன்று அணு ஆயுதங்களை தாங்கிச்செல்லும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை ஜப்பான் கடல்பகுதியில் நிகழ்த்தியுள்ளதாகவும், இந்தாண்டில் இதுவரை 12 ஏவுகணைகளை ஏவி சோதனை நிகழ்த்தியுள்ளதாகவும் தென்கொரிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. … Read more

கொடூர கொலை வழக்கில் தொடர்புடைய சைக்கோ கொலைகாரி-சிறையிலிருந்து விடுதலை..!

Van Houten Released from Prison: லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 1969ஆம் ஆண்டு நடந்த இரட்டை கொலை வழக்கில் தொடர்புடையை சைக்கோ கொலைகாரி கிட்டத்தட்ட 53 வருடங்களுக்கு பிறகு விடுதலை செய்யப்பட்டுள்ளார். 

சுத்திகரிக்கப்பட்ட கதிரியக்க நீரை கடலில் கலக்க தயாராகும் ஜப்பானுக்கு வலுக்கும் எதிர்ப்பு

டோக்கியோ: நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட ஃபுகுஷிமா அணுமின் நிலையத்தின் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை கடலில் விடும் ஜப்பானின் முடிவுக்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. 2011-ல் ஜப்பானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சுமார் 20,000-க்கு அதிகமமான மக்கள் உயிரிழந்தனர். இந்தப் பேரிடரில் மாயமான 1000-க்கும் அதிகமானவர்களை தற்போது வரை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலநடுக்கத்தினால் ஃபுகுஷிமா அணுமின் நிலையமும் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் அழிக்கப்பட்ட அணு உலையில் இருந்த எரிபொருள்களுடன் தொடர்புடைய கதிரியக்க தன்மையுடைய மாசுபடுத்தப்பட்ட நீரை சுத்திகரிக்கும் முற்சியில் … Read more

ஒரு நாளைக்கு ரூ.2.38 லட்சம் வருமானம்… சிங்கப்பூரில் மாஸ் காட்டும் அந்த ஒரு மதுபான வகை!

உலகின் பல்வேறு நாடுகளில் தனித்துவம் வாய்ந்த பாரம்பரிய மதுபான வகைகள் இருக்கின்றன. அதில் 1915 எனப்படும் சிங்கப்பூர் ஸ்லிங் வகை மதுபானமும் ஒன்று. இது கியாம் டாங் பூன் (Ngiam Tong Boon) என்ற மதுபான விற்பனையாளரால் கடந்த 1915ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இது ஒரு காக்டெய்ல் வகையிலான மதுபானம். கன்னியாகுமரி to சிங்கப்பூர்; சைக்கிளில் விழிப்புணர்வு பயணம்!! சிங்கப்பூர் ஸ்லிங் முதலில் இந்த மதுபானம் உருவாக்கப்பட்டது பெண்களுக்காக தான் எனக் கூறுகின்றனர். அந்த காலகட்டத்தில் … Read more

“உக்ரைனின் எதிர்காலம் இனி எங்கள் வசம்” – உச்சி மாநாட்டில் நேட்டோ உறுதி

வில்னியஸ்: உக்ரைனின் எதிர்காலம் இனி நேட்டோவில்தான் உள்ளது என்று அந்த அமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்ற உலக நாடுகளின் தலைவர்கள் உறுதியளித்துள்ளனர். ஐரோப்பிய நாடான லிதுவேனியாவில் உள்ள வில்னியஸ் நகரில் நேட்டோ அமைப்பு நாடுகளின் உச்சி மாநாடு நடந்தது. இதில், உக்ரைன் விவகாரம் முக்கியத்துவம் பெற்றிருந்தது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், “உக்ரைனின் எதிர்காலம் நேட்டோ அணிக்குள்தான் உள்ளது. அணியில் உள்ள நாடுகள் நிபந்தனைகளை ஒப்புக்கொண்டு, அது நிறைவேற்றப்படும்போது உக்ரைனை அணியில் சேருவதற்கான அழைப்பு விடுக்கப்படும்” என்று … Read more

இரட்டை குட்டிகளை பெற்றெடுக்கும் பாண்டா கரடி… அந்த பாசத்த வீடியோவில் பாருங்க!

Panda Twins Video: தென் கொரியாவில் ஒரு பாண்டா கரடி அங்கு முதல்முறையாக இரட்டை குட்டிகளை ஈன்றுள்ளது. தற்போது, தாயும், குட்டிகளும் நலமுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நெருங்கும் நேட்டோ உச்சி மாநாடு – உக்ரைன் மீதான தாக்குதலை தீவிரப்படுத்திய ரஷ்யா

கீவ்: நேட்டோ உச்சி மாநாடு நடைபெற உள்ள நிலையில் உக்ரைன் தலைநகர் கீவ் மீதான வான்வழி தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தி இருக்கிறது. ஐரோப்பிய நாடான லிதுவேனியாவில் உள்ள வில்னியஸில் நேட்டோ அமைப்பு நாடுகளின் உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது. வில்னியஸ் மாநாட்டில் உக்ரைனுக்கு நல்ல தகவல் கிடைக்கும் என்று நேட்டோ அமைப்பின் தலைவர் ஜின்ஸ் ஸ்டோலன்பெர்க் தெரிவித்திருந்தார். இந்தச் சூழலில் தொடர்ந்து இரண்டாவது நாளாக ரஷ்யா, கீவ்வில் தீவிர வான்வழித் தாக்குதலை நடத்தி வருகிறது. இதனால் கீவ் … Read more