Iceland, volcano erupts in Reykjavik after small earthquakes | ஐஸ்லாந்தில் நிலநடுக்கம் காரணமாக வெடித்த எரிமலை: புகை மண்டலமான பகுதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ரெய்க்யவிக்: கடந்த சில தினங்களாக ஐஸ்லாந்தில் ஏற்பட்டு வந்த நிலநடுக்கம் காரணமாக, எரிமலையில் வெடிப்பு ஏற்பட்டது. நெருப்புக் குழம்பு வெளியேறியதால் புகை மண்டலமாக காட்சியளித்தது. வடக்கு அட்லாண்டிக் கடலில் உள்ள தீவு நாடான ஐஸ்லாந்தின் தலைநகரமான ரெய்க்யவிக்கை சுற்றியுள்ள பகுதிகளில், சில நாட்களுக்கு முன், 2 ஆயிரத்து 200 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டு வானிலை மையம் தகவல் தெரிவித்து இருந்தது. எரிமலை எப்பொழுது வேண்டுமென்றாலும் வெடிக்கலாம் எனவும் எச்சரிக்கை … Read more

தென் ஆப்பிரிக்காவில் பனிப்பொழிவு: அரிதான நிகழ்வால் மக்கள் மகிழ்ச்சி

ஜோஹனெஸ்பெர்க்: தென் ஆப்பிரிக்காவின் ஜோஹனெஸ்பெர்க் நகரில் பனிப்பொழிவு காரணமாக சாலைகள் ஆங்காங்கே மூடப்பட்டுள்ளன. நாட்டின் மிகப்பெரிய தொழில் நகரமாக அறியப்படுவதால் வியாபார, வர்த்தக ரீதியாக இந்த பனிப்பொழிவால் சிரமங்கள் இருந்தாலும் இத்தகைய அரிதான நிகழ்வு மகிழ்ச்சியளிப்பதாகக் கூறுகின்றனர் ஜோஹனெஸ்பெர்க் நகரவாசிகள். ஆனால், திடீர் பனிப்பொழிவால் மிகக் கடுமையான குளிர்நிலை ஏற்படலாம் என்று வானிலை ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர். ஜோஹனெஸ்பெர்க் நகரத்தில் கடந்த வாரம் தொடங்கி கடும் குளிர் வாட்டி எடுக்கிறது. கடந்த வார இறுதியில் இது “cut-off low” … Read more

நாயை கண்டமேனிக்கு கடித்து வைத்த நபர்… அதிர்ச்சியில் உறைந்த போலீஸார்!

நாய் மனிதனை கடிப்பது சகஜம். ஆனால் ஒரு மனிதனால் எப்போதாவது நாயைக் கடித்த சம்பவத்தைகேள்விப்பட்டிருக்கிறீர்களா? இது நம்ப முடியாத விஷயமாக தோன்றலாம், ஆனால் உண்மையில் நடந்த சம்பவம் தான். 

நைஜீரியாவில் லாரி மீது பஸ் மோதி 20 பேர் உயிரிழப்பு

அபுஜா, நைஜீரியாவின் தென்மேற்கு மாகாணமான லாகோஸ்-படக்ரி தேசிய நெடுஞ்சாலையில் பயணிகள் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. மோவோ நகர் அருகே சென்றபோது அதன் முன்னால் சென்ற மணல் லாரியை பஸ் முந்த முயன்றது. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் நிலைதடுமாறி லாரி மீது மோதியது. இந்த கோர விபத்தில் பஸ்சில் இருந்த 20 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர். படுகாயம் அடைந்தவர்களுக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தினத்தந்தி Related Tags … Read more

காதலிக்கு ரூ.900 கோடி வழங்கிய இத்தாலி முன்னாள் பிரதமர்

ரோம்: இத்தாலி நாட்டின் பிரதமராக 4 முறை சில்வியோ பெர்லுஸ்கோனி பதவி வகித்தார். அவருக்கு 2 மனைவிகள். 2020-ம் ஆண்டில் மார்தா பாசினா என்ற பெண் எம்.பி.யுடன் அவருக்கு காதல் மலர்ந்தது. அப்போது அவருக்கு 83 வயது. மார்தாவுக்கு 33 வயது. கடந்த மாதம் 12-ம் தேதி பெர்லுஸ்கோனி உயிரிழந்தார். தனது ரூ.56,000 கோடி மதிப்பிலான சொத்துகள் தொடர்பாக அவர் உயில் எழுதி வைத்துள்ளார். இதன்படி பெர்லுஸ்கோனியின் முதல் மனைவிக்கு பிறந்த மகன், மகளுக்கு பினின்வெஸ்ட் ஊடக … Read more

நெதர்லாந்தில் அரசியலை விட்டு விலகும் முன்னாள் பிரதமர் ரூட்டே

ஹேக், நெதர்லாந்து நாட்டை பொறுத்தவரை அகதிகளை குடியமர்த்துவது என்பது மிகவும் தீவிர பிரச்சினையாக உள்ளது. எனவே இவர்களுக்கு குடியுரிமை கொடுப்பது தொடர்பான மசோதா அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது. ஆனால் கூட்டணி கட்சிகள் இதற்கு ஆதரவு தெரிவிக்காததால் பிரதமர் மார்க் ரூட்டே தனது பதவியை கடந்த 3 நாட்களுக்கு முன்னர் ராஜினாமா செய்தார். இதனையடுத்து தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக அவர் அறிவித்து இருந்தார். இந்த நிலையில் தற்போது அங்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் … Read more

உக்ரைனில் பள்ளிக்கூடம் மீது நடந்த டிரோன் தாக்குதலில் 4 பேர் உயிரிழப்பு – போர்க்குற்றம் புரிந்ததாக ரஷியா மீது குற்றச்சாட்டு

கீவ், ரஷியா-உக்ரைன் இடையேயான போர் கடந்த 16 மாதங்களாக நடைபெற்று வருகிறது. இதில் அவ்வப்போது இரு நாடுகளும் டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்களில் ஈடுபடுகின்றன. இந்த நிலையில் தெற்கு உக்ரைனின் சபோரிஜியா மாகாணத்தில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் போரில் பாதிக்கப்பட்டவர்களுக்காக நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வந்தன. அப்போது அந்த பள்ளிக்கூடத்தின் மீது ரஷியா திடீரென டிரோன் தாக்குதல் நடத்தியது. இதில் அங்கு நின்று கொண்டிருந்த 3 பெண்கள் உள்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பல … Read more

எங்களை ஐரோப்பிய யூனியனின் சேர்த்தால் ஸ்வீடனை நேட்டோவில் சேர்க்க அனுமதிப்போம் – துருக்கி கெடுபிடி

அங்காரா, அமெரிக்கா தலைமையிலான நேட்டோ ராணுவ அமைப்பில் பல்வேறு ஐரோப்பிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. ஆனால், ஐரோப்பிய நாடுகளான ஸ்வீடன், பின்லாந்து ஆகிய நாடுகள் நேட்டோ ராணுவ அமைப்பில் இடம்பெறாமல் இருந்தது. இதனிடையே, உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து போது நேட்டோ அமைப்பில் இணையாத ஸ்வீடன், பின்லாந்து ஆகிய ஐரோப்பிய நாடுகள் நேட்டோவில் இணைய விண்ணப்பித்தன. நேட்டோ அமைப்பில் ஐரோப்பிய யூனியனில் இடம்பெறாத துருக்கி நேட்டோ அமைப்பின் உறுப்பினராக உள்ளது. நேட்டோ அமைப்பில் புதிதாக ஒரு நாடு … Read more

இலங்கை பேருந்து விபத்து – 11 பேர் உயிரிழப்பு..!

பொலனறுவை, இலங்கையில், நேற்று (ஞாயிற்று கிழமை) 67 பயணிகளுடன் கதுருவெலயிலிருந்து அக்கரைப்பற்று நோக்கி பேருந்து ஒன்று சென்றுக்கொண்டிருந்தது. பொலநறுவை அருகே வந்தபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாக சென்று மானம்பிட்டியவில் கொட்டாலிய பாலத்தின் மீது மோதி மகாவலி ஆற்றில் விழுந்தது. இந்த விபத்தை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக மீட்புப்படைக்கு தகவல் தெரிவித்தனர். பலர் ஆற்றில் குதித்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். பின்னர் அங்கு வந்த மீட்புபடையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டனர். இதுவரை 40 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் 11 … Read more

இந்துவாக மாறி நொய்டாவை சேர்ந்த இளைஞரை திருமணம் செய்த பாகிஸ்தான் பெண்: மனைவியை மீட்டுத்தர பிரதமர் மோடிக்கு கணவர் வேண்டுகோள்

புதுடெல்லி: நான்கு குழந்தைகளுடன் இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள தன் மனைவியை மீட்டுத் தருமாறு பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவர் பிரதமர் நரேந்திர மோடிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். பாகிஸ்தானின் சிந்து மாகாணம் கைராப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் குலாம் ஹைதர் அவரதுமனைவி சீமா ஹைதர். இவர்களுக்கு 4 குழந்தைகள் உள்ளனர். குலாம் ஹைதர் தற்போது சவுதி அரேபியாவில் வேலை செய்து வருகிறார். அவரது மனைவி சீமாஹைதர் பாகிஸ்தானில் குழந்தைகளுடன் வசித்து வந்தார். சீமா ஹைதர் மொபைலில் பப்ஜி கேம் விளையாடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். … Read more