ரஷியா: பெட்ரோல் பங்கில் பயங்கர வெடி விபத்து – 35 பேர் பலி

மாஸ்கோ, ரஷியாவின் தெற்கு பகுதியில் டகிஸ்டன் மாகாணம் உள்ளது. இந்த மாகாணத்தின் தலைநகர் மக்ஹச்கலா நகரில் உள்ள பெட்ரோல் பங்கில் நேற்று பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. பெட்ரோல் நிலையம் அருகே இருந்த கார் பழுதுபார்க்கும் கடையில் முதலில் தீ விபத்து ஏற்பட்டது. தீ வேகமாக பெட்ரோல் பங்க் மீது பரவியது. இதனால், பெட்ரோல் பங்கில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்தில் 3 குழந்தைகள் உள்பட 35 பேர் உயிரிழந்தனர். மேலும், 115 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து … Read more

எத்தியோப்பியாவில் வான்வழித் தாக்குதல்: 26 பேர் உயிரிழப்பு.!

அம்ஹாரா, எத்தியோப்பியாவின் அம்ஹாரா பகுதியில் நடைபெற்ற வான்வழி தாக்குதலில் குறைந்தது 26 பேர் கொல்லப்பட்டதாக மருத்துவமனை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். எத்தியோப்பியாவில் ராணுவம் மற்றும் உள்ளூர் போராளிகளுக்கு இடையிலான மோதல் காரணமாக இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இது டிரோன் தாக்குதல் என்று குடியிருப்பாளர்கள் தெரிவித்தனர். மனித உரிமைகள் ஆணையம், மனித உரிமைச் சட்டங்களை மீறுவதாகக் கூறப்படும் அனைத்து மோதல் சம்பவங்களையும் உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது. தினத்தந்தி Related Tags : எத்தியோப்பியா  வான்வழித் … Read more

இலங்கையில் மீண்டும் இன பதற்ற சூழல்| Ethnic tension again in Sri Lanka

மீண்டும் இன கலவரம் வெடிக்கும் சூழல் இலங்கையில் உருவாகி வருவதாக, இலங்கையை கண்காணிக்கும் இந்திய உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது பற்றி அவர்கள் தெரிவித்ததாவது: இலங்கை அரசின் தொல்பொருள் துறை ஆதரவுடன், தமிழர் பகுதிகளை ஆக்கிரமித்து, ஆங்காங்கே புத்த துறவிகள் தங்குவதற்கான மடாலயங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இது தமிழர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. பழமை வாய்ந்த சூழிபுரம் பறலை முருகன் கோவிலில் உள்ள அரசமரம், மாமன்னர் அசோகரின் மகள் சங்கமித்ரையோடு தொடர்புடையது என புத்த துறவிகள் கூறி … Read more

இஸ்ரேலிய பாதுகாப்புப்படையினர், பாலஸ்தீனிய ஆயுதக்குழுவினர் இடையே மோதல் – 2 பேர் சுட்டுக்கொலை

ஜெருசலேம், இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. பாலஸ்தீனத்தின் காசா முனையை ஹமாஸ் அமைப்பு ஆட்சி செய்கிறது. இந்த அமைப்பை இஸ்ரேல், பயங்கரவாத இயக்கமாக கருதுகிறது. ஹமாஸ் அமைப்பை போன்று மேலும் சில ஆயுதமேந்திய குழுக்கள் காசா முனை, மேற்குகரையில் செயல்பட்டு வருகின்றன. அதேவேளை பாலஸ்தீனத்திற்கு மேற்கு கரையில் முகமது அப்பாஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. மேற்குகரையின் சில பகுதிகள் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ளன. இந்த பகுதிகளில் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்கும், … Read more

அமெரிக்காவில் வீடு வெடித்து சிதறி 5 பேர் பலி

வாஷிங்டன், அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணம் அலெகெனி பகுதியில் உள்ள ஒரு வீடு திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த பகுதியில் மின்சாரம் மற்றும் கியாஸ் வினியோகம் உடனடியாக நிறுத்தப்பட்டது. எனினும் இந்த விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியாகினர். மேலும் படுகாயம் அடைந்த … Read more

புர்ஜ் கலிபாவில் கொடி காட்டாததால் பாக்., மக்கள் ஏமாற்றம்: வீடியோ வைரல்| People disappointed at Burj Khalifa for not displaying Pakistan flag: Video goes viral

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் துபாய்: உலகின் உயரமான கட்டடங்களில் ஒன்றான புர்ஜ் கலிபாவில் பாக்., தேசிய கொடியை காண்பிக்காததால் அந்நாட்டு மக்கள் ஏமாற்றம் அடையும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. பாகிஸ்தானின் சுதந்திரதினம் ஆக.,14 ம் தேதி கொண்டாடப்பட்டது. துபாயில் உள்ள பாகிஸ்தானியர்களும் தங்கள் நாட்டின் சுதந்திர தினத்தை கொண்டாட தயாராகினர். இதற்காக புர்ஜ் கலிபா கட்டடத்தின் முன்னதாக குவிந்தனர். இந்த கட்டடம் உலகின் உயரமான கட்டடங்களில் ஒன்றாகும். அது மட்டுமல்லாது உலகின் … Read more

கம்போடியாவில் பள்ளி வளாகத்தில் கண்ணிவெடி கண்டெடுக்கப்பட்டதால் பரபரப்பு

புனோம் பென், கம்போடியா நாட்டில் 1970-களில் தொடங்கிய உள்நாட்டு போர் 1990-களின் இறுதி வரை நீடித்தது. இந்த போரில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இந்த போரின்போது ஏராளமான கையெறி குண்டுகள், கண்ணிவெடிகள் போன்றவை பயன்படுத்தப்பட்டன. போர் முடிந்த சமயத்தில் மட்டும் சுமார் 60 லட்சம் வெடிகுண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்கள் அங்கு இருந்ததாக கூறப்படுகிறது. அவற்றில் ஏராளமான வெடிகுண்டுகள் அழிக்கப்பட்டன. வெடிமருந்து கிடங்குகள் எனினும் சில இடங்களில் அந்த வெடிகுண்டுகள் வெடிமருந்து கிடங்குகளில் புதைத்து வைக்கப்பட்டன. அந்தவகையில் … Read more

ட்ரம்ப் சரணடைய வேண்டும்… அதிரடி உத்தரவு போட்ட நீதிமன்றம்.. இது 4வது கிரிமினல் வழக்கு!

அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் மற்றும் 18 பேர் மீது மீது ஜார்ஜியா மாகாண தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்க முயற்சி செய்ததாக நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஃபுல்டன் கவுண்டி மாவட்ட நீதிபதி பானி வில்லீஸ் நடத்திய இரண்டு ஆண்டுகள் விசாரணையைத் தொடர்ந்து இந்த குற்றப் பத்திரிகை வழங்கப்பட்டுள்ளது. ஜார்ஜியாவில் உள்ள அரசு அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்து தனது தோல்வியை மாற்றியமைக்க ட்ரம்ப் முயற்சி செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் பானி வில்லீஸ் இந்த விசாரணையை நடத்தினார். … Read more

கோவிட் பாதிப்பை கண்டறிய உதவும் நாய்கள்: பி.சி.ஆர் சோதனையை விட துல்லியமாக கண்டுபிடிக்கிறதாம்!| Trained scent dogs may more effectively detect Covid than RT-PCR tests: Study

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கலிபோர்னியா: பழக்கப்படுத்தப்பட்ட நாய்களால் கோவிட் பாதிப்பை பி.சி.ஆர் சோதனையை விட திறம்பட கண்டறிய முடியும் என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். கோவிட் வைரஸ் பரவல் உலகம் முழுவதும் பரவி 2 ஆண்டுகள் பல நாடுகளை ஸ்தம்பிக்க வைத்தது. பாதிப்புகள், உயிரிழப்புகள் என தொடர்ந்துவந்த நிலையில், தடுப்பூசி செலுத்தப்பட்ட பிறகே பாதிப்பு குறைந்து கட்டுக்குள் வந்தது. கோவிட் பரவலின்போது தொற்று பாதிப்பு இருக்கிறதா இல்லையா என்பதை அறிய பி.சி.ஆர் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் … Read more

மூழ்கும் நகரங்கள்.. டைம் ட்ராவலர் கொடுத்துள்ள அதிர்ச்சி தகவல்…!

புவி வெப்பமயமாதலின் விளைவுகள் இப்போது மெல்ல மெல்லத் தெரிகின்றன. வானிலை மாற்றம், கடுமையான வெப்பம் ஆகியவை நமக்கு இதனை உணர்த்துகின்றன.