அமெரிக்காவில் காட்டுத்தீயால் பலியானோரின் எண்ணிக்கை 93 ஆக உயர்வு

வாஷிங்டன், அமெரிக்க மாகாணங்களுள் ஒன்றான ஹவாய் தீவுகள் பசிபிக் கடல் பகுதியில் அமைந்துள்ளது. இந்த தீவுக்கூட்டங்களின் 2-வது பெரிய நகரமாக மவுய் தீவு விளங்குகிறது. இந்த தீவில் உள்ள ஹலைனா பகுதியில் கடந்த வாரம் திடீரென காட்டுத்தீ ஏற்பட்டது. பின்னர் இந்த காட்டுத்தீ மளமளவென நகரின் மற்ற பகுதிகளுக்கு வேகமாக பரவ ஆரம்பித்தது. தீவு பகுதி என்பதால் அங்கு பெரும்பாலான வீடுகள் மரத்தால் செய்யப்பட்டு இருந்தன. எனவே நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் அங்கு தீப்பிடித்து எரிந்தன. இதனால் … Read more

சீனாவின் ஷான்சி மாகாணத்தில் பயங்கர நிலச்சரிவு: 4 பேர் உயிரிழப்பு

பீஜிங், சீனாவின் பல மாகாணங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அங்குள்ள ஷான்சி மாகாணத்தில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் பல வீடுகள் மற்றும் பாலங்கள் சேதமடைந்தன. இதனால் பல இடங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.இந்த நிலச்சரிவில் சிக்கி 4 பேர் உயிர்ழந்தனர். மேலும் 16 பேர் மாயமானதாக கூறப்படுகிறது. எனவே அவர்களை தேடும் பணியில் மீட்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். தினத்தந்தி Related Tags : China  Landslide  … Read more

ஈரான்: ஷா செராக் கோவிலில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு தாக்குதலில் ஒருவர் பலி

தெஹ்ரான், ஈரானின் தெற்கு நகரமான சிராசில் உள்ள ஷியா முஸ்லிம்களின் வழிபாட்டுத்தலத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு தாக்குதலில் குறைந்தது ஒருவர் கொல்லப்பட்டதாகவும் ஏழு பேர் காயமடைந்துள்ளதாகவும் உள்ளூர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதுகுறித்து செய்தி நிறுவனம் ஒன்று கூறுகையில், துப்பாக்கி ஏந்திய ஒருவர் ஷா செராக் ஆலயத்திற்குள் நுழைய முயன்றதாகவும், அங்கிருந்த பார்வையாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் தெரிவித்தது. இந்த சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு, நீதித்துறை அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டு வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த … Read more

வங்காளதேசத்தில் பறவை மோதியதால் இரு விமானங்கள் தரையிறக்கம்

டாக்கா, வங்காளதேசத்தின் தலைநகர் டாக்காவில் அமைந்துள்ள சர்வதேச விமான நிலையத்தில் இருந்து தாய்லாந்துக்கு விமானம் ஒன்று புறப்பட்டது. புறப்பட்ட சிறிது நேரத்தில் இந்த விமானத்தின் மீது ஒரு பறவை மோதியது. இதில் விமானத்தின் ஒரு டயர் வெடித்ததால் உடனடியாக விமானம் தரையிறக்கப்பட்டது. அதேபோல் மற்றொரு விமானத்தின் மீது பறவை மோதியதில் அதன் சில எந்திரங்கள் சேதமடைந்தன. இதனையடுத்து அந்த இரு விமானங்களின் பயணமும் ரத்து செய்யப்பட்டு மாற்று விமானத்தில் பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் விமான … Read more

பறந்து கொண்டிருந்தபோது 3 நிமிடங்களில் 15,000 அடி கீழ் இறங்கிய அமெரிக்க விமானம்!

புளோரிடா: அமெரிக்க நாட்டில் வானில் பறந்து கொண்டிருந்த விமானம் ஒன்று 3 நிமிடங்களில் சுமார் 15,000 அடி கீழ் இறங்கியுள்ளது. அதனால், அதில் பயணித்த பயணிகள் அதிர்ச்சியில் உறைந்து போயினர். அமெரிக்க நாட்டின் விமான நிறுவனம் இயக்கி வரும் விமானம் ஒன்று வட கரோலினாவின் சார்லோட் பகுதியில் இருந்து புளோரிடாவின் கெய்னெஸ்வில்லிக்கு கடந்த 10-ம் தேதி பயணித்துள்ளது. அப்போது அந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென வெறும் மூன்றே நிமிடங்களில் சுமார் 15,000 அடி கீழ் … Read more

பாகிஸ்தான் இடைக்கால பிரதமராக அன்வாருல் ஹக் காதர் பதவியேற்பு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் இடைக்கால பிரதமராக நியமிக்கப்பட்ட அன்வாருல் ஹக் காதர் இன்று பதவியேற்றார். பாகிஸ்தான் நாடாளுமன்றத்துக்கு பொதுத் தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு, அந்நாட்டின் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. இதையடுத்து, நாடாளுமன்றத் தேர்தலை இடைக்காலப் பிரதமர் தலைமையிலான அரசு நடத்துவதற்கேற்ப, கடந்த சனிக்கிழமை இடைக்காலப் பிரதமராக அன்வாருல் ஹக் காதர் தேர்வு செய்யப்பட்டார். பிரதமர் பதவியில் இருந்த ஹெபாஸ் ஷெரீப், எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருந்த ராஜா ரியாஸ் ஆகியோர் மிக நீண்ட ஆலோசனைக்குப் பிறகு நாட்டின் இடைக்காலப் … Read more

பாகிஸ்தான் காபந்து பிரதமர் பொறுப்பேற்பு – விரைவில் தேர்தல்.. குழப்பங்கள் தீருமா?

பாகிஸ்தானின் அரசியல் சூழல் கடந்த இரண்டு ஆண்டுகளாக நெருக்கடிகளும் குழப்பங்களும் நிறைந்ததாக இருந்து வருகிறது. 2022ஆம் ஆண்டு நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் இம்ரான் கான் அரசு தோல்வியடைந்த பிறகு நவாஸ் ஷெரீப் சகோதரர் ஷெபாஸ் ஷெரீப் பிரதமராக பதவியேற்றார். ஒரு வருடம் கடந்த நிலையில் ஆகஸ்ட் 9ஆம் தேதி பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பரிந்துரையின் படி பாகிஸ்தான் நாடாளுமன்றம் திடீரென கலைக்கப்பட்டது. அதன்பிறகு காபந்து பிரதமரை தேர்ந்தெடுக்க தற்போதைய பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் … Read more

ஒரே நாளில் விடுதலை… ஆனால் ஆக. 14இல் சுதந்திர தினம் கொண்டாடும் பாகிஸ்தான் – அது ஏன்?

Independence Day 2023: இந்தியாவும், பாகிஸ்தானும் ஒரே நாளில் சுதந்திரம் பெற்ற நிலையில், ஏன் பாகிஸ்தான் இந்தியாவை விட ஒருநாள் முன் சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது என்பது குறித்து இதில் காணலாம். 

“மார்க் ஒரு சிக்கன்” – சீண்டிய எலான் மஸ்க்… சூடுபிடிக்கும் சண்டை…

ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய உலகின் பெரும் பணக்காரர் எலான் மஸ்க், அதிரடியான மாற்றங்களை நிகழ்த்தி வருகிறார். ஒரே நாளில் ட்விட்டர் ஊழியர்கள் பெரும்பாலானோரை வேலையில் இருந்து நீக்கி வீட்டுக்கு அனுப்பினார். எலான் மஸ்க் எடுக்கும் முடிவுகள் கோமாளித்தனமாக இருப்பதாக சமூக வலைதளங்களில் விமர்சனங்களை கிளப்பின. ஒரு கட்டத்தில் ட்விட்டரின் பெயரையே மாற்றி ‘x’ என்று பெயரிட்டார் எலான் மஸ்க். இதனிடையே ட்விட்டருக்கு போட்டியாக அதே வசதிகளைக் கொண்ட த்ரெட்ஸ் என்ற சமூக வலைதளத்தை உருவாக்கினார் மெட்டா நிறுவனத்தின் … Read more

90 நாட்களுக்குள் காலி செய்யலைன்னா ரத்த ஆறு ஓடும்… சீனாவை எச்சரிக்கும் பலூச் கிளர்ச்சியாளர்கள்!

பலுசிஸ்தானின் குவாடாரில் சீன குடிமக்கள் மீது பலுசிஸ்தான் விடுதலை இராணுவம் (BLA) நடத்திய தாக்குதல் பாகிஸ்தானுக்கு ஒரு பெரிய பிரச்சனையாக மாறியுள்ளது