வட கொரியாவில் தற்கொலைக்கு தடை விதித்து கிம் ரகசிய உத்தரவு: தென் கொரியா தகவல்

பியாங்யாங்: வட கொரியாவில் தற்கொலைக்கு தடை விதித்து ரகசிய உத்தரவை, அந்நாட்டு அதிபர் கிம் பிறப்பித்துள்ளதாக தென் கொரியா கூறியுள்ளது. இது குறித்து தென் கொரியாவின் உளவு அமைப்பு கூறும்போது, “வடகொரியாவில் நாளுக்கு நாள் மக்களிடம் கஷ்டம் அதிகரித்து வருகிறது. மோசமான பொருளாதாரச் சூழல் காரணமாக வட கொரியாவில் தற்கொலைகள் 40% அதிகரித்துள்ளது. வட கொரியாவின் கோங்ஜின் பகுதியில் மட்டும் கடந்த ஆண்டில் 35 பேர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். இதற்கிடையில், கடந்த ஆண்டு வட கொரியாவில் … Read more

விளையாடிக்கொண்டிருந்த பள்ளி குழந்தைகளை கத்தியால் குத்திய சிரிய நாட்டு அகதி கைது..!

பிரான்ஸில் பூங்காவில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகளை கத்தியால் கண்மூடித்தனமாகக் குத்திய சிரிய நாட்டு அகதியை பாதுகாப்பு படையினர் துரிதமாக செயல்பட்டு கைது செய்தனர். அனஸி நகரில், சுற்றுலா அழைத்து செல்லப்பட்ட பள்ளி குழந்தைகள் பூங்காவில் விளையாடிய போது அவர்களை ஒருவன் கத்தியால் தாக்கத் தொடங்கினான். பாதுகாப்பு படையினர் அவனை உடனடியாக சுற்றிவளைத்து கைது செய்தனர். அவன் சிரியாவிலிருந்து சட்ட விரோதமாக பிரான்ஸுக்கு வந்துள்ளது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. படுகாயமடைந்த 6 குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் … Read more

North Koreas Kim Jong Un passes secret order banning suicide | தற்கொலை செய்ய தடை: வட கொரிய அதிபர் உத்தரவு

பியாங்யாங்: வட கொரியாவில் கடந்த ஆண்டை விட இந்தாண்டு தற்கொலை செய்வோர் எண்ணிக்கை 40 சதவீதம் அளவிற்கு உயர்ந்துள்ளதை அடுத்து, அங்கு தற்கொலைக்கு தடை விதித்து அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டுள்ளார். தற்கொலை என்பது ஒருவர் தனக்கு தானே சுய விருப்பத்தின்படி செய்யும் கொலையாகும். வெறுப்பு, கோபம், மன அழுத்தம், பயம், வறுமை போன்ற பல காரணங்களால் தற்கொலை நடக்கிறது. இது குற்றமாக கருதப்பட்டாலும், அந்த எண்ணத்தில் இருந்து மீண்டு வர பல வழிகளும் … Read more

Italian MP creates history by breastfeeding in Parliament amid applause | பார்லிமென்டில் குழந்தைக்கு பாலூட்டிய பெண் எம்.பி.,: குவியும் பாராட்டு

ரோம்: இத்தாலி பார்லிமென்டில், அந்நாட்டு பெண் எம்.பி., ஒருவர் , அழுத தனது 2 மாத குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த செயலுக்கு மற்ற எம்.பி.,க்கள் பாராட்டினர். 36 வயதான பெண் எம்.பி., கில்டா ஸ்போர்டெல்லோ என்பவர் பார்லிமென்டிற்கு தனது 2 மாத ஆண் குழந்தையுடன் வந்திருந்தார். அப்போது, குழந்தை திடீரென அழத் துவங்கியது. இதனை கேட்ட பார்லிமென்ட் அமைதியானது. குழந்தை பசிக்காக அழுவதை தெரிந்து கொண்ட கில்டா ஸ்போர்டெல்லோ அங்கேயே குழந்தையை அமைதிப்படுத்தி பாலூட்ட துவங்கினார். இதன் … Read more

அறுவை சிகிச்சைக்காக போப் பிரான்சிஸ் மருத்துவமனையில் அனுமதி

ரோம், கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான 86 வயது போப் பிரான்சிஸ், குடல் அறுவை சிகிச்சைக்காக வாடிகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து வாடிகன் தேவாலயத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கடந்த சில நாட்களாக ஹெர்னியா பாதிப்பால் போப் பிரான்சிஸ் அவதிப்பட்டு வந்ததாக கூறப்பட்டுள்ளது. இதையடுத்து மருத்துவர்களின் தீவிர பரிசோதனை மற்றும் ஆலோசனைகளுக்குப் பிறகு அறுவை சிகிச்சைக்குப் பரிந்துரைக்கப்பட்ட நிலையில், ரோமில் உள்ள மருத்துவமனையில் போப் பிரான்சிஸ் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அறுவை சிகிச்சை முடிந்த பிறகு நீண்ட நாட்களுக்கு அவர் … Read more

எகிப்து: லாரி மீது வேன் மோதி விபத்து – 4 பெண்கள் பலி

கெய்ரோ, எகிப்து நாட்டின் நிலி டெல்டா மாகாணம் ஹர்பியா நகரில் வேனில் 14 தொழிலாளர்கள் சென்றுகொண்டிருந்தனர். அப்போது சாலையில் எதிரே வந்த டிராக்டர் மீது வேன் அதிவேகமாக மோதியது. இந்த கோர விபத்தில் வேனில் பயணித்த 4 பெண்கள் உயிரிழந்தனர். மேலும் 10 பேர் படுகாயமடைந்தனர். மோசமான சாலை, அதிவேகம் காரணமாக எகிப்தில் அதிக அளவில் விபத்துக்கள் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர் தினத்தந்தி Related … Read more

சோமாலியா: பாதுகாப்பு படையினர் அதிரடி தாக்குதல் – 20 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

மொகதிசு, கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள நாடு சோமாலியா. இங்கு அல் ஷபாப், ஐஎஸ், அல்கொய்தா உள்பட பல்வேறு பயங்கரவாத குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த பயங்கரவாத குழுவை ஒழிக்கும் நடவடிக்கையில் அந்நாட்டு பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் சோமாலியாவுக்கு உகாண்டா பாதுகாப்பு படையினரும் உதவி வருகின்றனர். இந்நிலையில், அந்நாட்டின் ஷபிலி நகரில் பதுங்கி இருந்த பயங்கரவாதிகளை குறிவைத்து பாதுகாப்பு படையினர் அதிரடி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் அல்ஷபாப் பயங்கரவாதிகள் 20 பேர் … Read more

நியூயார்க் நகரத்தை சூழ்ந்த ஆரஞ்சு புகை; அச்சமடைந்த மக்கள்: பின்னணி என்ன?

வாஷிங்டன்: நியூயார்க் நகரம் சில மணி நேரங்கள் ஆரஞ்சு நிற புகையால் மூடப்பட்டதால் மக்கள் குழப்பமும் பீதியும் அடைந்தனர். கனடாவில் ஏற்பட்ட காட்டுத் தீயின் தாக்கத்தினால் உருவான நச்சுப் புகைகள்தான் வட அமெரிக்காவின் நியூயார்க் நகரில் தீவிரமான தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் விளக்கிய நிலையில் மக்கள் சகஜ நிலைக்குத் திரும்பினர். இந்தப் புகையினால் நியூயார்க்கில் காற்று மாசு அளவு அபாயகரமான அளவை எட்டியது, அதனால் அன்றைய நாளில் உலகளவிலான காற்றின் தரத்தின் … Read more

'செர்பியாவைச் சேர்ந்த பயிற்சியாளர்கள் இந்திய வீரர்களின் திறமைகளை மேம்படுத்த உதவுகிறார்கள்' – ஜனாதிபதி திரவுபதி முர்மு

பெல்கிரேடு, இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு சூரிநாம் மற்றும் செர்பியா ஆகிய இரு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர், அவர் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு பயணம் இதுவாகும். சூரினாம் நாட்டில் கடந்த 4-ந்தேதி முதல் 6-ந்தேதி வரையிலான முர்முவின் பயணம் நிறைவடைந்த நிலையில், நேற்று காலை அவர் செர்பியாவுக்கு புறப்பட்டார். செர்பியாவின் பெல்கிரேடு நகரில் உள்ள நிகோலோ டெஸ்லா விமான நிலையத்திற்கு நேற்று மாலை தனி விமானத்தில் திரவுபதி முர்மு சென்றடைந்தார். பின்னர் … Read more