இஸ்ரேல் ராணுவம் அதிரடி தாக்குதல்: பாலஸ்தீனிய ஆயுதக்குழுவினர் 8 பேர் பலி

ஜெருசலேம், இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவ வருகிறது. பாலஸ்தீனத்தின் காசா முனையை ஹமாஸ் அமைப்பு ஆட்சி செய்கிறது. இந்த அமைப்பை இஸ்ரேல் பயங்கரவாத இயக்கமாக கருதுகிறது. ஹமாஸ் அமைப்பை போன்று மேலும் சில ஆயுதமேந்திய குழுக்கள் காசா முனை, மேற்குகரையில் செயல்பட்டு வருகின்றன. அதேவேளை பாலஸ்தீனத்திற்கு மேற்கு கரையில் முகமது அப்பாஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. மேற்குகரையின் சில பகுதிகள் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த பகுதிகளில் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்கும், … Read more

ஒரே நேரத்தில் குவிந்த 45,000 போலீசார் : பற்றி எரியும் பிரான்ஸ் – என்ன நடக்கிறது?

பாரீஸ், பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் அருகே நான்டெர்ரே நகரில் உள்ள போக்குவரத்து சிக்னலில் கடந்த வாரம் சிவப்பு நிற எச்சரிக்கையை மீறி வேகமாக ஒரு கார் சென்றது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த காரை துரத்தி சென்றனர். அப்போது அந்த காரை நிறுத்துவதற்காக போலீசார் துப்பாக்கியால் சுட்டனர். இதில் காரில் இருந்த 17 வயது ஆப்பிரிக்க சிறுவன் கொல்லப்பட்டான். இது குறித்த வீடியோ அங்குள்ள சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதனையடுத்து சிறுவனுக்கு ஆதரவாக பொதுமக்கள் … Read more

கொலம்பியாவில் பயிற்சியின்போது நேருக்கு நேர் மோதிய ராணுவ விமானங்கள்: விமானி பலி

பகோட்டா, தென் அமெரிக்க நாடான கொலம்பியாவின் அபியாய் பகுதியில் விமானப்படை தளம் அமைந்துள்ளது. இங்கு ராணுவ வீரர்கள் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது வானில் சாகசம் செய்து கொண்டிருந்த இரு விமானங்கள் விமானியின் கட்டுப்பாட்டை இழந்து நேருக்கு நேர் மோதின. இந்த விபத்தில் இரு விமானங்களும் சுக்குநூறாக நொறுங்கி கீழே விழுந்தன. இதில் ஏற்பட்ட பலி விவரங்கள் குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகமல் இருந்தது. இதற்கிடையே இரு விமானங்களும் மோதி கீழே விழுந்த வீடியோ அங்குள்ள … Read more

கம்போடியாவில் கேளிக்கை விடுதி தீப்பிடித்து 6 பேர் பலி

புனோம் பென், கம்போடியா நாட்டின் தலைநகர் புனோம் பென்னில் ஒரு கேளிக்கை விடுதி அமைந்துள்ளது. இந்த விடுதியின் ஒருபுறம் கட்டிடத்தை புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதேசமயம் விடுதியின் ஒரு அறையில் கேளிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது. வார விடுமுறையை முன்னிட்டு அங்கு பலர் சென்றிருந்தனர். இந்தநிலையில் விடுதியின் ஒரு அறை திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனை பார்த்ததும் அங்கிருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு வெளியேறினர். இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு படையினர் அங்கு விரைந்து சென்று தீயை கட்டுக்குள் கொண்டு … Read more

மெக்சிகோவில் வினோதம்; பெண் முதலையை திருமணம் செய்த மேயர்

மெக்சிகோ சிட்டி, தெற்கு மெக்சிகோவில் உள்ள நகரம் சான் பெட்ரோ ஹுவாமெலுலா. இந்த நகரத்தின் மேயராக இருப்பவர் விக்டர் ஹியூகோ சொசா. இவர், ஆலிசியா ஆட்ரியானா என்ற பெயர் கொண்ட பெண் முதலை ஒன்றை பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து கொண்டு உள்ளார். இது 230 ஆண்டு கால பழமையான நடைமுறையாகும். இதனால், மழை பொழிவு இருக்கும், பயிர்கள் செழிப்புடன் வளரும், அமைதி மற்றும் நல்லிணக்கம் ஏற்படும் என்ற நோக்கத்திற்காக இந்த திருமண நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. சொந்தல் … Read more

வன்முறையை நிறுத்துங்கள்: பிரான்ஸில் கொல்லப்பட்ட ஆப்பிரிக்க சிறுவனின் குடும்பத்தினர் கோரிக்கை

பாரிஸ்: பிரான்ஸில் நடக்கும் வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டும் என்று அந்நாட்டு போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட ஆப்பிரிக்க சிறுவனின் பாட்டி வேண்டுகோள் விடுத்துள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை நாந்தேரி என்ற இடத்தில் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, காரில் வந்த17 வயதுடைய நஹெல் என்ற சிறுவன் போலீஸாரின் எச்சரிக்கையை மீறி செல்ல முயன்றதால் சுட்டுக் கொல்லப்பட்டார். இனவெறியின் காரணமாக அரங்கேறியதாக நம்பப்படும் இந்தச் சம்பவம் பிரான்சில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பொதுமக்கள், தன்னார்வலர்கள் என ஆயிரக்கணக்கானோர் கடந்த ஒரு … Read more

Top 5 List: சர்வதேச நாணய நிதியத்தில் அதிக கடன் வாங்கிய பாகிஸ்தானுக்கு லிஸ்டில் எந்த இடம்?

Pakistan One Of Largest IMF Borrower: மோசமான பொருளாதார நெருக்கடியில் உள்ள பாகிஸ்தான், சர்வதேச நாணய நிதியத்திடம் அதிக கடன் வாங்கும் நாடுகளின் பட்டியலில் முன்னேறிக் கொண்டே இருக்கிறது

ஜாக் மா பாகிஸ்தான் சீக்ரெட்… அப்படியென்ன பிஸினஸ் டீல்… எகிறப் போகும் எகானமி?

ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/- ஜாக் மா என்றால் சர்வதேச அளவிலான தொழில் துறையில் தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். சீனாவின் மிகப்பெரிய கோடீஸ்வரராக பல்வேறு துறைகளில் கொடிகட்டி பறந்தவர். இவரை வளர்த்து விட்டதில் சீன அரசின் பங்கு நிறைய உண்டு. சீனாவின் தொழில் சாம்ராஜ்யம் எப்படி இருக்கும் என்பதற்கு ஜாக் மா ஒரு சிறந்த உதாரணம் என முன்னிறுத்தியது. ஜாக் மா தொழில் சாம்ராஜ்யம்இவரது அலிபாபா நிறுவனம் இந்தியாவில் … Read more

இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் பாலஸ்தீனர்கள் 5 பேர் உயிரிழப்பு; பலர் படுகாயம்

டெல் அவிவ்: பாலஸ்தீனத்தின் மேற்கு கரை பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 5 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர். இதனால் அங்கு பதற்றம் நிலவுகிறது. இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், ”மேற்கு கரை பகுதியில் உள்ள ஜெனின் அகதிகள் முகாமில் இஸ்ரேல் ராணுவத்தினர் வான்வழி தாக்குதல் நடத்தினர். நள்ளிரவில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் பாலஸ்தீனர்கள் 5 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்” என்று செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இன்று காலை, மேற்கு கரையில் இஸ்ரேல் ராணுவம் சுமார் பத்துமுறை … Read more

22 ஆண்டுகளுக்கு முன் இலங்கைக்கு பரிசாக வந்த யானை… திரும்ப கேட்ட தாய்லாந்து..!

யானை தொடர்பாக தாய்லாந்துக்கும் இலங்கைக்கும் இடையே ராஜீய நிலையில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் தாய்லாந்து இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கிய இந்த யானை தற்போது மீண்டும் திரும்பப் பெறப்பட்டுள்ளது.