அதிவேகமாக சென்ற கார் எதிரே வந்த டிராக்டர் டிராலி மீது மோதி விபத்து… 3 பேர் உயிரிழப்பு <!– அதிவேகமாக சென்ற கார் எதிரே வந்த டிராக்டர் டிராலி மீது மோத… –>

ஹரியானா மாநிலம் களனூரிலிருந்து ரோஹ்தக் நகரை நோக்கி அதிவேகமாக சென்று கொண்டிருந்த கார் ஒன்று எதிரே வந்த டிராக்டர் டிராலி மீது மோதியதில், 3 பேர் உயிரிழந்தனர்.

லஹ்லி கிராமத்திற்கு அருகே ரோஹ்தக் நகரை நோக்கி அதிவேகமாக சென்று கொண்டிருந்த கார், எதிர்புறத்தில் இருந்து வந்த டிராக்டர் டிராலி மீது பலமாக மோதியது. இதில், 3 பேர் உயிரிழந்தனர். மேலும், ஒருவர் படுகாயமடைந்தார்.

தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்த ஒருவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.