பாறை இடுக்கில் சிக்கி தவித்த இளைஞர் பத்திரமாக மீட்பு| Dinamalar

பாலக்காடு: கேரளாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் பாறை இடுக்கில் சிக்கி தவித்து வந்த நிலையில், அவரை ராணுவ உதவியுடன் பத்திரமாக மீட்டனர்.

கேரள மாநிலம் பாலக்காடு மலம்புழா மலையில் ஏறிய பாபு என்ற 23 வயது இளைஞர் தனது மூன்று நண்பர்களுடன் குரும்பாச்சி மலைக்கு சென்றுள்ளார். மலையேற்றத்தின் போது நடுவழியில் கால் தவறியதில் பாபு உருண்டு விழுந்து, அதிர்ஷ்டவசமாக பாறை இடுக்கில் இருந்த சிறிய குகையில் சிக்கி கொண்டார். இதில் அவரது கால்களில் சிராய்ப்பு ஏற்பட்டது. அவரை மீட்க தீயணைப்பு வீரர்கள் முயற்சி செய்தனர்.

ஹெலிகாப்டர் மூலம் மீட்கும் பணியும் தோல்வியில் முடிவடைந்ததால், கேரள முதல்வர் பினராயி விஜயன் ராணுவ உதவியை நாடினார். இதனையடுத்து, வெலிங்டன், பெங்களூருவில் இருந்து வந்துள்ள மலையேற்ற பயிற்சி பெற்ற ராணுவ வீரர்கள், சுமார் 3 நாட்களாக மலை இடுக்கில் சிக்கியிருக்கும் பாபுவை, பத்திரமாக மீட்டனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.