மம்முட்டியின் சிபிஐ-5ஆம் பாகத்தில் இணைந்த கனிகா

மம்முட்டி நடிப்பில் கடந்த முப்பது வருடங்களில் நான்கு பாகங்களாக வெளியாகி வரவேற்பை பெற்ற படம் ஒரு சிபிஐ டைரி குறிப்பு. தற்போது இந்தப்படத்தின் ஐந்தாம் பாகத்திற்கான படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. கே.மது இயக்கிவரும் இந்தப்படத்தில் கனிகா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். படப்பிடிப்பு தளத்தில் இயக்குனர் மதுவுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு இதை உறுதிப்படுத்தி உள்ளார் கனிகா.

மஞ்சு வாரியரை போலவே ஹவ் ஓல்டு ஆர் யூ படத்தின் மூலம் தனது இரண்டாவது இன்னிங்ஸை துவங்கிய கனிகா, தற்போது மலையாளத்தில் மோகன்லால், மம்முட்டி, சுரேஷ்கோபி உள்ளிட்ட சீனியர் ஹீரோக்களின் படங்களில் தவறாமல் இடம்பெற்று வருகிறார் சமீபத்தில் வெளியான மோகன்லாலின் ப்ரோ டாடி படத்தில் கல்யாணி பிரியதர்ஷனுக்கு அம்மாவாக நடித்திருந்தார் கனிகா. சுரேஷ் கோபிக்கு ஜோடியாக இவர் நடித்துள்ள பாப்பன் என்கிற படம் விரைவில் ரிலீஸாக இருக்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.