மணிப்பூர் மாநில சட்டப்பேரவை தேர்தல் வாக்குப் பதிவு நாள் பிப்ரவரி 27-ம் தேதிக்கு பதில் பிப்ரவரி 28-ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு

மணிப்பூர்: மணிப்பூர் மாநில சட்டப்பேரவை தேர்தல் வாக்குப் பதிவுக்கு ஏற்கனவே அறிவித்த தேதியை தேர்தல் ஆணையம் மாற்றி அறிவித்துள்ளது. 60 தொகுதிகளை கொண்ட மணிப்பூர் மாநில சட்டசபைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. அதன்படி, முதல்கட்ட தேர்தல் பிப்ரவரி 27-ம் தேதியும், இரண்டாம் கட்ட தேர்தல் மார்ச் 3-ம் தேதியும் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதேபோல், தேர்தலில் பதிவான வாக்குகள் மார்ச் 10-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இந்நிலையில், மணிப்பூர் சட்டசபை தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் மாற்றியுள்ளது.  அதன்படி, முதல் கட்ட தேர்தல் பிப்ரவரி 27-ம் தேதிக்கு பதிலாக பிப்ரவரி 28-ம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், இரண்டாம்கட்ட தேர்தல் மார்ச் 3-ம் தேதிக்கு பதிலாக மார்ச் 5-ம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் திட்டமிட்டபடி  மார்ச் 10-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்படுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.