ஜம்மு காஷ்மீர் – பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் போலீஸ்காரர் மரணம்

ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பண்டிபோரா மாவட்டத்தில் பகுதியில் எல்லைப் பாதுகாப்புப் படையினர் இன்று ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு வந்த பயங்கரவாதிகள் பணியில் இருந்த போலீசார் மீது திடீரென கையெறி குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தினர்.
 
இந்த தாக்குதலில் படுகாயமடைந்த போலீஸ்காரர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் காயமடைந்த 4 போலீசாரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர்.
 
பயங்கரவாதிகள் நடமாட்டத்தைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.