சென்னை: வீட்டில் தனியாக இருந்த நர்ஸுக்குப் பாலியல் தொல்லை; இளைஞர் கைது; என்ன நடந்தது?

நாகப்பட்டினத்தைச் சேர்ந்த 28 வயது பெண் ஒருவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்ஸாக வேலை செய்து வருகிறார்.

இவர், தண்டையார்பேட்டை பகுதியில் தன்னுடைய உறவினர் வீட்டில் தங்கியிருக்கிறார். இவரின் தூரத்து உறவினர் மணிபாரதி. இவர் அடிக்கடி நர்ஸின் உறவினர் வீட்டுக்கு வருவதுண்டு.

25.04.2026-ம் தேதி நர்ஸின் உறவினர்கள், கோயிலுக்குச் சென்றுவிட்டனர். அதனால் வீட்டில் தனியாக நர்ஸ் இருந்தார். அப்போது வீட்டுக்கு வந்த மணிபாரதியும் , நர்ஸும் சகஜமாகப் பேசிக் கொண்டிருந்தனர்.

மணிபாரதி
மணிபாரதி

திடீரென நர்ஸைத் தகாத உறவுக்கு மணிபாரதி அழைத்தததாகத் தெரிகிறது. அதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், வீட்டில் உள்ள அறைக்குள் சென்று கதவைப் பூட்டிக் கொண்டார். பின்னர் மணிபாரதி, அங்கிருந்து சென்றுவிட்டார்.

இந்தச் சம்பவம் குறித்து நர்ஸ், தன்னுடைய உறவினர்களிடம் தெரிவித்தார். பின்னர், வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்திலும் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து மணிபாரதியிடம் விசாரித்தனர். பின்னர் அவரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.