திருச்சியில் பள்ளிக், கல்லூரி மாணவர்களுக்கு போதை மருந்து சப்ளை – 7 பேர் கைது <!– திருச்சியில் பள்ளிக், கல்லூரி மாணவர்களுக்கு போதை மருந்து … –>

திருச்சியில் பள்ளிக் கல்லூரி மாணவர்களுக்கு போதைப் பொருள் சப்ளை செய்ததாக 7 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

மத்திய பேருந்து நிலையம், ஸ்ரீரங்கம், பாலக்கரை, அரியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் மாணவர்களுக்கு ஒரு கும்பல் போதை மாத்திரை, மருந்துகளை சட்டவிரோதமாக சப்ளை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதுகுறித்து விசாரணை நடத்திய தனிப்படை போலீசார் காட்டூரை சேர்ந்த 2 பேர் மற்றும் கல்லுக்குழி, முடுக்குப்பட்டியை சேர்ந்த 5 பேர் என மொத்தம் 7 பேரை
கைது செய்து அவர்களிடம் இருந்து ஆயிரத்து 450 போதை மாத்திரைகள், 80 போதை மருந்து பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.