நல்ல வேளை, விருப்பமில்லாத தனுஷை கட்டாயப்படுத்தினார் அப்பா

தனுஷும்,
ஐஸ்வர்யா
ரஜினிகாந்தும் காதலித்து திருமணம் செய்து கொண்டு 18 ஆண்டுகள் கழித்து பிரிந்துவிட்டனர். 2 மகன்களை பற்றி நினைத்துப் பார்க்காமல் இப்படி ஒரு முடிவு எடுத்துவிட்டாயே என மகள் மீது கோபத்தில் இருக்கிறாராம் ரஜினி.

அப்பாவின் கோபத்தால் தனுஷுடன் மீண்டும் சேர்ந்து வாழ முடிவு செய்துவிட்டாராம் ஐஸ்வர்யா. ஆனால் என்ன ஆனாலும் சரி இனி ஐஸ்வர்யாவுடன் சேர்ந்து வாழ மாட்டேன் என்கிறாராம்
தனுஷ்
.

காதல் கொண்டேன் படத்தை பார்க்க வந்த இடத்தில் தான் தனுஷுக்கும், ஐஸ்வர்யாவுக்கும் இடையே சந்திப்பு ஏற்பட்டு அப்படியே காதல் வளர்ந்தது. தனுஷ் நடிகர் ஆக அவரின் தந்தையும், இயக்குநருமான கஸ்தூரி ராஜா தான் காரணம்.

பல ஆண்டுகளாக தொடரும் ஐஸ்வர்யாவின் இன்னொரு காதல்
நடிக்கும் ஆசை எல்லாம் தனுஷுக்கு இல்லை. ஆனால் உன்னால் முடியும் என்று அவரை கட்டாயப்படுத்தி நடிகராக்கிவிட்டார் கஸ்தூரி ராஜா. அப்பாவுக்காக கேமராவுக்கு முன்பு வந்த தனுஷுக்கு முதலில் அது சங்கடமாக இருந்தாலும், பின்னர் பிடித்துவிட்டது.

சிறந்த நடிகருக்கான தேசிய விருதை இரண்டு முறை பெற்றிருக்கிறார் தனுஷ். கஸ்தூரி ராஜா மட்டும் தனுஷை கட்டாயப்படுத்தாமல் இருந்திருந்தால் திரையுலகிற்கு நல்ல நடிகர் கிடைத்திருக்க மாட்டார் என்கிறார்கள் ரசிகர்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.