மருமகன் திட்டியதால் மாமனார், மாமியார் தற்கொலை.. கோவையில் நிகழ்ந்த சோகம்..!

மருமகன் திட்டியதால் மாமியார் மாமனார் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டம், மாப்பிள்ளை கவுண்டம் பாளையத்தை சேர்ந்தவர் தமிழ்செல்வன். இவருக்கு திருமணமாகி சத்திய பிரியா என்ற மனைவியும் 6 வயது மகனும் உள்ளனர். இந்நிலையில், அவரின் மகன் நீண்ட நேரம் டிவி பார்ப்பதை தமிழ்செல்வன் கண்டித்துள்ளார்.

இதனை கண்ட அவரது மனைவி மகனை ஏன் திட்டுகிறீர்கள் என கேட்டுள்ளார். இதனால், இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை கண்ட சத்திய பிரியாவின் தாய் சமாதானம் பேச முயன்றார்.

அப்போது தமிழ்ச்செல்வன் அவரை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அவர் தனது கணவரிடம் கூறியுள்ளார். இதில், மன உளைச்சலுக்கு உள்ளான இருவரும் தற்கொலை செய்து கொண்டனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தற்கொலைக்கு தூண்டியதாக தமிழ்செல்வன் மீது வழக்குபதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.