Dhansuh:தனுஷ், ஐஸ்வர்யா பற்றி அப்பா கஸ்தூரி ராஜா சொன்னது நிஜமா?

தனுஷும்,
ஐஸ்வர்யா
ரஜினிகாந்தும் காதலித்து கடந்த 2004ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள். அவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்று இரண்டு வளர்ந்த மகன்கள் இருக்கிறார்கள். பிள்ளைகள் வளர்ந்துவிட்ட நிலையில் தனுஷும், ஐஸ்வர்யாவும் பிரிந்துவிட்டார்கள்.

ஜனவரி 17ம் தேதி பிரிவு குறித்து இருவரும் சமூக வலைதளங்களில் அறிவிப்பு வெளியிட்டனர். இருவரையும் சேர்த்து வைக்க ரஜினி பெரும் முயற்சி செய்து கொண்டிருக்கிறாராம்.

என்னை தேடி வந்த ‘முசாபிர்’, இந்த கனெக்ஷன் தப்பாகாது: ஐஸ்வர்யா
முன்னதாக அறிவிப்பு வெளியான கையோடு தனுஷின் அப்பா அது பற்றி கூறியதாவது, இது பிரிவு அல்ல. எல்லா குடும்பத்திலும் ஏற்படும் சாதாரண தகராறு தான். நான் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறேன் என்றார்.

தனுஷும், ஐஸ்வர்யாவும் பிரிந்தது எதிர்பார்த்தது தான். பிரிவு அறிவிப்பை வெளியிட அவர்கள் பல காலம் எடுத்துக் கொண்டார்கள் என்கிறார்தள் திரையுலகை சேர்ந்தவர்கள். மேலும் தனுஷும், ஐஸ்வர்யாவும் பிரிந்தது தவிர்க்க முடியாதது என தெரிவித்துள்ளனர்.

அப்படி என்றால் தனுஷும், ஐஸ்வர்யாவும் பிரியவில்லை என்று கஸ்தூரி ராஜா சொன்னது உண்மையா, இல்லையா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.