விடுதி உரிமையாளருடன் ஆபாசமாக புகைப்படம் எடுத்து பணம் கேட்டு மிரட்டிய இளம்பெண் உள்பட 2 பேர் கைது

பெரும்பாவூர்,
கேரள மாநிலம் மட்டாஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் ரின்சினா (வயது 26). இவர் கொச்சி துறைமுக பகுதியில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் கடந்த மாதம் 25-ந் தேதி தனது ஆண் நண்பர் ஆட்டோ டிரைவரான ஷாஜகானுடன் (27) வந்தார். பின்னர் இருவரும் அங்கு தங்கி இருந்தனர்.

இந்த நிலையில் கடந்த 31-ந் தேதி ஷாஜகான் திடீரென்று அந்த விடுதி உரிமையாளரின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு பேசினார். அதில் தாங்கள் இருவரும் விடுதியில் உள்ள குளிர்பானத்தை வாங்கி குடித்தோம். இதனால் தங்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு இருப்பதால் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருப்பதாக கூறினார்.
இதையடுத்து விடுதி உரிமையாளர் தனது நண்பருடன் ஷாஜகான் கூறிய ஆஸ்பத்திரிக்கு சென்றார். அப்போது அங்கு இருந்த ஷாஜகான் திடீரென்று ரின்சினாவிடம் உல்லாசமாக இருக்க கட்டாயப்படுத்தி உள்ளார். அதற்கு அவர் சம்மதிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதையடுத்து அவர் 2 பேரையும் மிரட்டி ரின்சினாவுடன் நிற்க வைத்து ஆபாச முறையில் தனது செல்போனில் புகைப்படம் எடுத்து உள்ளார். பின்னர் அந்த புகைப்படத்தை வைத்துக்கொண்டு பணம் கொடுக்கவில்லை என்றால் உறவினர்களுக்கு அனுப்பி வைப்பதுடன், சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்துவிடுவதாக மிரட்டி உள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த 2 பேரும் தங்களிடம் இருந்த ரூ.16 ஆயிரத்தை கொடுத்துவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர். பின்னரும் அவர் தொடர்பு கொண்டு பணம் கேட்டு மிரட்டி உள்ளார். இது குறித்து விடுதி உரிமையாளர் மட்டாஞ்சேரி போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஷாஜகான், ரின்சினா ஆகியோரை கைது செய்தனர். மேலும் இவர்கள் 2 பேரும் இதுபோன்று வேறு யாரிடமாவது மிரட்டி பணம் பறித்து உள்ளார்களா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.