10 நிமிடம் காத்திருக்கும்படி பயணிகளிடம் வேண்டுகோள்… கடமைக்கு மத்தியிலும் ஜனநாயக கடமையாற்றிய பேருந்து ஓட்டுநர் <!– 10 நிமிடம் காத்திருக்கும்படி பயணிகளிடம் வேண்டுகோள்… கடம… –>

தருமபுரி மாவட்டம் பொம்மிடியில் தனியார் பேருந்து ஓட்டுநர் ஒருவர் பணியின்போது, பயணிகளிடம் 10 நிமிடம் அனுமதி வாங்கி வாக்களித்துள்ளார்.

ஸ்ரீதர் என்ற அந்த நபர் பாலக்கோட்டிலிருந்து சேலம் செல்லும் தனியார் பேருந்தில் ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார்.  சனிக்கிழமை பணியில் இருந்த ஸ்ரீதர், வழக்கம்போல் பாலக்கோட்டிலிருந்து சேலம் நோக்கி பயணிகளை ஏற்றிச் சென்றுள்ளார்.

பொம்மிடி வந்ததும் வாக்குச்சாவடி மையம் அமைந்துள்ள பள்ளி அருகே பேருந்தை நிறுத்திய ஸ்ரீதர், வாக்களித்துவிட்டு வருவதற்காக பயணிகளிடம் 10 நிமிடம் அனுமதி கோரியுள்ளார். அவர்களும் அனுமதி வழங்கவே, விறுவிறுவென பேருந்தில் இருந்து இறங்கிச் சென்று வாக்களித்துவிட்டு பேருந்தை எடுத்துச் சென்றார். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.