அரசாங்க வாகனங்களுக்கு எரிபொருளை பயன்பாடு தொடர்பில் கட்டுப்பாடு



அரசாங்க வாகனங்களுக்கு எரிபொருளை பயன்படுத்துவதற்கான புதிய வழிகாட்டல் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளன.

பொது சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ரத்னசிறியினால் இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, அத்தியாவசியமற்ற பயணங்களுக்கு அரசாங்க வாகனங்களுக்கு எரிபொருளை பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கூட்டங்கள் , கலந்துரையாடல்களுக்கு வெளி மாகாணங்களில் இருந்து வரும் அதிகாரிகள் அரசாங்க வாகனங்களைப் பயன்படுத்துவது ஏற்கனவே கொழும்புக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொது சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ரத்னசிறி தெரிவித்துள்ளார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.