மணிப்பூரில் வேட்பாளரின் தந்தை துப்பாக்கியால் சுட்டுக் கொலை

இம்பால்: மணிப்பூரில் வேட்பாளரின் தந்தை துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மணிப்பூர் சட்டமன்ற தேர்தல் வரும் 27ம் தேதி, அடுத்த மாதம் 5-ம் தேதி என இரு கட்டங்களாக நடக்கிறது. அந்த மாநிலத்தின் ஆண்ட்ரோ தொகுதியில் தேசிய மக்கள் கட்சியின் வேட்பாளராக சஞ்சோய் சிங் என்பவர் போட்டியிடுகிறார். அவர் தனது வீட்டின் நுழைவாயில் அருகே தனது தந்தை மற்றும் ஆதரவாளர்களுடன் நேற்று முன்தினம் தேர்தல் தொடர்பாக ஆலோசித்து கொண்டிருந்தார். அந்த நேரத்தில் அங்கு வந்த மர்ம நபர்கள், கண் இமைக்கும் நேரத்தில் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சுட்டு விட்டு தப்பினர். அதில், வேட்பாளரின் தந்தை தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு அதே பகுதியில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வரும் அவரை, தேசிய மக்கள் கட்சியின் தலைவரும், மேகாலயா முதல்வருமான கான்ராட் கே.சங்மா சந்தித்து பேசினார். இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வேட்பாளரின் தந்ைத பரிதாபமாக இறந்தார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.