நட்சத்திர பட்டாளங்களுடன் களமிறங்கும் சுந்தர் சி: செம்ம ட்ரீட் காத்திட்டு இருக்கு..!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக திகழ்பவர்
சுந்தர் சி
. இவர் இயக்கத்தில் கடைசியாக ‘அரண்மனை 3’ படம் வெளியாகி இருந்தது. இந்நிலையில் மிகப்பெரிய படத்தில் நட்சத்திர பட்டாளத்துடன் தனது அடுத்த பட பணிகளை துவங்கியுள்ளார் சுந்தர் சி.

ஊட்டியில் நடைபெற்று வரும் சுந்தர்.சியின் புதிய பட ஷூட்டிங்கில் இணைந்துள்ளார்
சம்யுக்தா
சண்முகநாதன். ஏற்கனவே டிடி, ஐஸ்வர்யா தத்தா, ரைசா வில்லியம்ஸ், அம்ரிதா அய்யர்,
ஜீவா
,
ஜெய்
மற்றும் ஸ்ரீகாந்த் என நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் பணிபுரிந்துவரும் நிலையில் தற்போது புதிதாக சம்யுக்தாவும் இணைந்துள்ளார்.

சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற இந்தப் பூஜையில் முதற்கட்ட படப்பிடிப்புகள் சென்னையிலும் அதனை தொடர்ந்து ஊட்டியில் ஒரே ஷெடியூலில் படப்பிடிப்பு முழுமையாக நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது ஊட்டியில் விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

Beast: பட ரிலீசுக்கு முன்னாடியே இப்படியாகி போச்சே: கதறும் தளபதி ரசிகர்கள்..!

இந்நிலையில் இந்தப்படத்தில் இணைந்துள்ளது குறித்து சம்யுக்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்,” சுந்தர்.சி இயக்கத்தில், ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், டிடி, ஐஸ்வர்யா ஆகியோரின் நடிப்பில் உருவாகிவரும் படத்தில் இணைவது மகிழ்ச்சி அளிக்கிறது. ஊட்டியில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இது மிக அருமையாக இருக்கப் போகிறது” பதிவிட்டுள்ளார்.

ஃபேமிலி என்டர்டெயின்மெண்டாக உருவாகி வரும் இந்தப் படத்தில் அடுத்தடுத்து திரை நட்சத்திரங்கள் இணைந்துவருவது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. குஷ்புவின்
அவ்னி மூவிஸ்
நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைப்பது குறிப்பிடத்தக்கது.

மேடையில் உளறிய Sandy Master…நக் ஷாவுக்கு சுத்தமா டான்ஸ் வராது!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.