`பார்களை மூட வேண்டும்..!’ – நீதிமன்ற உத்தரவு யாருக்கான செக்?!

தனியாரிடமிருந்த மதுபான சில்லரை விற்பனையை 2003-ம் ஆண்டு முதல் தமிழக அரசே ஏற்றுநடத்தி வருகிறது. இதற்காக தமிழ்நாடு மதுவிலக்கு சட்டம் 1937-ஐ திருத்தி, தமிழ்நாடு மதுபான சில்லரை விற்பனை விதிகள் 2003 என்ற சட்டத்திருத்தத்தை நிறைவேற்றியது அப்போதைய ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு. அதன்படி, தமிழ்நாடு வாணிப கழகம் (டாஸ்மாக்) என்ற நிறுவனம் உருவாக்கப்பட்டது. அன்று முதலே, மதுக்கடைகளை ஒட்டி, தனியார் சார்பில் அமர்ந்து மது அருந்துவதற்காகவும், காலி பாட்டில் சேகரிப்பு மற்றும் திண்பண்டங்கள் விற்பனை என்ற … Read more

மின்வாரியத்தில் ரூ.17,000 கோடி இழப்பு; நிர்வாகத்தை சீரமைக்க துணிச்சலான முடிவுகளை எடுக்கவும்: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: மின் உற்பத்தியை அதிகரிப்பது, நிர்வாக சீர்கேடுகளை களைவது போன்றவற்றின் மூலம் மின்சார வாரியத்தை லாபத்தில் இயக்குவதற்கான துணிச்சலான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: “தமிழக மின்சார வாரியத்தின் இழப்பு 2020-21ம் ஆண்டில் ரூ.17,000 கோடியாக அதிகரித்து இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது மின்சார வாரியத்தின் வரலாற்றில் இதுவரை இல்லாத இழப்பு ஆகும். மின்வாரிய இழப்பு ரூ.12,800 கோடி என்ற அளவில் … Read more

பாடகர் லதா மங்கேஷ்கர் மறைவு: இன்று மாலை மும்பையில் அரசு மரியாதையுடன் இறுதி அஞ்சலி

மும்பை: பிரபல பாடகர் லதா மங்கேஷ்கரில் உடல் இன்று மாலை முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசியக் கொடிகளை அரைக் கம்பத்தில் பறக்கவிட்டு இரண்டு நாட்களுக்கு துக்கம் அனுசரிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. கரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பழம்பெரும் பாடகர் லதா மங்கேஷ்கர் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 92. 20 நாட்களுக்கும் மேலாக கரோனா தொற்றுக்காக மும்பை ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு … Read more

ஊழியர்கள் அனைவருக்கும் ரூ.1.1 லட்சம் போனஸ்: மைக்ரோசாஃப்ட் அறிவிப்பு

பெருந்தொற்றுக் கால ஊக்கத்தொகையாக ஊழியர்கள் அனைவருக்கும் ரூ.1.1 லட்சம் வழங்கப்படும் என்று மைக்ரோசாஃப்ட் அறிவித்துள்ளது. மைக்ரோசாஃப்ட்டில் பகுதி நேர, மணி நேரக் கணக்கில் பணிபுரிவோர் உட்பட அனைத்து ஊழியர்களுக்கும் இந்த ஊக்கத்தொகை அளிக்கப்பட உள்ளது. கரோனா தொற்றுப் பரவல் உலகம் முழுவதும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. எனினும் தகவல் தொழில்நுட்பம் மற்றும் மருத்துவம் சார் துறைகள் முன்னெப்போதையும் விடத் தொய்வின்றி இயங்கி வருகின்றன. அவற்றுக்கான தேவையும் அதிகரித்துள்ளது. உலகப் புகழ்பெற்ற பன்னாட்டு நிறுவனமான மைக்ரோசாஃப்ட்டில் 1,75,508 ஊழியர்கள் … Read more

வார்த்தைகளில் சொல்ல முடியாத வேதனையில் இருக்கிறேன்: பிரதமர் மோடி

கொரோனா தொற்று காரணமாக மும்பையின் ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் கடந்த மாதம் 8ஆம் தேதி பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கர் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவரது உடல்நிலை சற்று கவலைக்கிடமாக இருந்ததால் உடனடியாக ஐசியூ வார்டில் வைத்து அவருக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து 20 நாள்கள் சிகிச்சைக்குப் பிறகு லதா மங்கேஷ்கர் உடல்நலம் தேறியது. இதனால் கடந்த வாரம் வெண்டிலேட்டர் சிகிச்சை நிறுத்தப்பட்டது. ஆனால், நேற்று அவரின் உடல்நிலை மீண்டும் கவலைக்கிடமாக உள்ளது என மும்பை … Read more

இப்படி நடந்துக்கிட்டா எனக்கு கோபம் வராதா ? :ஐஸ்வர்யா

நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா சமீபத்தில் தங்கள் பிரிவை அறிவித்தனர். இவர்கள் பிரிவுக்கு பல தரப்பிலிருந்து பல காரணங்கள் சொல்லப்படுகிறது. இருப்பினும் இந்த பிரிவு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மேலும் இதனால் ரஜினி மிகவும் சோகத்தில் இருக்கின்றார். தன் பிள்ளைகளின் நலனை உணராமல் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா பிரிந்ததால் அவர்கள் மீது கடும் கோபத்தில் இருக்கின்றார் ரஜினி. தற்போது தன் இல்லத்தில் யாரிடமும் பேசாமல் தனிமையில் இருக்கின்றார் ரஜினி. இவரின் கோபத்தை தணிக்க லதா தன் மகள் … Read more

பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை

நீர் நிலைகளில் நீராடச் செல்வது தொடர்பில் பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பழக்கமில்லாத நீர்நிலைகளில் நீராடுதல் மற்றும் நீரில் இறங்குவதனை தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இலங்கை உயிர் காப்பு ஒன்றியத்தினால் இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. நீர்நிலை பற்றி தெரியாதவர்கள் நீந்துவதன் மூலமான விபத்துக்களே அதிகளவில் பதிவாகி வருகின்றது என ஒன்றியத்தின் தலைவர் அசங்க நாணயக்கார தெரிவித்துள்ளார். நீரில் மூழ்கும் நபர் ஒருவரை நீச்சல் தெரியாதவர்கள் காப்பாற்ற மேற்கொள்ளும் முயற்சிகளினால் அதிகளவு மரணங்கள் பதிவாகி வருவதாக அவர் … Read more

மெக்சிகோவில் கொள்ளைக் கும்பலுக்குள் ஏற்பட்ட கோஷ்டி மோதலில் 16 பேர் கொலை <!– மெக்சிகோவில் கொள்ளைக் கும்பலுக்குள் ஏற்பட்ட கோஷ்டி மோதலில… –>

மெக்சிகோவில் கொள்ளைக் கும்பலுக்குள் ஏற்பட்ட கோஷ்டி மோதலில் 16 பேர் கொலைச் செய்யப்பட்டனர். போதைப் பொருள் கடத்தல்,கொள்ளை மற்றும் கொலை கும்பலுக்குள் அடிக்கடி கோஷ்டி மோதல் ஏற்பட்டு உயிரிழப்புகள் நிகழ்கின்றன. இந்நிலையில் Fresnillo பகுதியில் இரு கோஷ்டியினரிடையே ஏற்பட்ட மோதலில் 16 பேர் கொல்லப்பட்டதாகவும், சாலையில் கிடந்த 10 பேரின் உடல்களை கைப்பற்றியதாகவும் போலீசார் தெரிவித்தனர். Source link

லதா மங்கேஷ்கர் மறைவையொட்டி, 2 நாட்களுக்கு தேசியளவில் துக்கம் கடைப்பிடிக்கப்படும் – மத்திய அரசு <!– லதா மங்கேஷ்கர் மறைவையொட்டி, 2 நாட்களுக்கு தேசியளவில் துக்… –>

லதா மங்கேஷ்கர் மறைவு – 2 நாட்கள் துக்கம் கடைப்பிடிப்பு லதா மங்கேஷ்கர் மறைவையொட்டி, 2 நாட்களுக்கு தேசியளவில் துக்கம் கடைப்பிடிக்கப்படும் – மத்திய அரசு இன்றும், நாளையும் தேசியக் கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்கவிடப்படும் – மத்திய அரசு Source link

36 மொழிகளில் பாடல்கள்.. யார் இந்த கானக்குயில் லதா மங்கேஷ்கர்?

இந்தியாவின் நைட்டிங்கேல் என செல்லமாக அழைக்கப்படும் லதா மங்கேஷ்கர், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை 8.12 மணிக்கு உயிரிழந்தார். கடந்த மாதம் 11ம் தேதி கொரோனா தொற்று காரணமாக மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் லதா மங்கேஷ்கர். அவரது உடல்நலம் தேறி வந்த நிலையில், நேற்று நிலைமை மோசமடைந்தது, கொரோனாவிற்கு பிந்தைய சிகிச்சையின் போது பல்வேறு உடல் உறுப்புகள் செயல் இழந்ததால் இன்று காலை 8.12 மணிக்கு … Read more