பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் மரணம்

மும்பை பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் கொரோனா தாக்குதலால் இன்று உயிர் இழந்தார். சென்ற மாதம் 8 ஆம் தேதி அன்று பிரபல பாடகி லதா மங்கேஷ்கருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது.  இதையொட்டி அவர் மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. நேற்று  அவர் உடல்நிலை மிகவும் மோசம் அடைந்துள்ளதாக  மருத்துவமனை சார்பில் அறிவிக்கப்பட்டது..  அவர் தொடர்ந்து 29 நாட்களாகச் சிகிச்சையில் இருந்தார்.  இன்று காலை அவர் உயிர் … Read more

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்- தலைவர்கள் பிரசாரம் இன்று தொடக்கம்

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் முடிவடைந்துள்ளது. இறுதி வேட்பாளர் பட்டியல் நாளை வெளியாகிறது. இதையடுத்து அரசியல் கட்சி தலைவர்கள் இன்று முதல் பிரசாரத்தை தொடங்கியுள்ளனர். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாகவே நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பிரசாரம் செய்ய உள்ளார். இன்று மாலை 5 மணியளவில் கோவை மாவட்டத்தில் இருந்து அவர் தனது காணொலி பிரசாரத்தை தொடங்குகிறார். இந்த காணொலி காட்சி பிரசாரத்தை மக்கள் பார்க்கும் வகையில், கோவை மாநகராட்சியில் … Read more

எனது இதயம் நொறுங்கியது… லதா மங்கேஷ்கர் மறைவுக்கு ஜனாதிபதி இரங்கல்

புதுடெல்லி: பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் காலமானார். மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலையில் அவரது உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 92. அவரது மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள், சினிமா பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.  ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், பாடகி லதா மங்கேஷ்கரின் மறைவால் தனது இதயம் நொறுங்கியதாக கூறி உள்ளார். ‘லதா மங்கேஷ்கரின் மறைவு … Read more

சோமாலியாவில் கண்ணிவெடி தாக்குதல்- 10 பேர் உயிரிழப்பு

மொகடிஷு: சோமாலியாவின் தெற்கு பகுதியில் உள்ள துறைமுக நகரமான கிஸ்மாயோ நகருக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு மினி வேன் சென்றுகொண்டிருந்தது. அப்போது, சாலையில் கிளர்ச்சியாளர்களால் புதைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணிவெடியில் சிக்கியது. கண்ணி வெடித்ததால் வேன் முற்றிலும் சிதைந்தது.  இதில், வேனில் இருந்த 5 பெண்கள், 4 குழந்தைகள் உள்பட 10 பேர் பலியாகினர். 3 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலை அல்-ஷபாப் கிளர்ச்சியாளர்கள் நிகழ்த்தியிருக்கலாம் என தெரிகிறது. கண்ணிவெடி வெடித்த சமயத்தில், அரசுப் … Read more

பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இந்தியாவின் இசைக்குயில் லதா மங்கேஷ்கர் மறைந்த செய்தியறிந்து வருத்தமுற்றேன். பல்வேறு மொழிகளில் தனது மெல்லிய குரலில் ஒவ்வொரு இந்தியரின் இதயத்தையம் தொட்டுள்ளார் என முதல்வர் தெரிவித்துள்ளார்.

பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் மறைவு; நாடு முழுவதும் 2 நாட்கள் தேசிய துக்க தினமாக அனுசரிக்கப்படும்.! ஒன்றிய அரசு அறிவிப்பு

டெல்லி: பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் மறைவையடுத்து நாடு முழுவதும் 2 நாட்கள் தேசிய துக்க தினமாக அனுசரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இரு நாட்களுக்கு தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல்நல குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் (92) சிகிச்சை பலனின்றி இன்று காலை காலமானார். இவரது மறைவிற்கு பிரதமர் மோடி உள்பட பலரும் இரங்கல் … Read more

‛குயின் ஆப் மெலடி' – லதா மங்கேஷ்கரின் திரையிசை பயணம்

‛‛நைட்டிங்கேள் ஆப் இந்தியா, குயின் ஆப் மெலடி, வாய்ஸ் ஆப் தி நேஷன்'' என பல பட்டங்களுக்கு சொந்தக்காரர் ஆன பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் இன்று(பிப்., 6) மறைந்தார். கொரோனாவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர் உடல்நிலை தேறி வந்த நிலையில் நேற்று முதல் மிகவும் கவலைக்கிடமாக இருந்தார். மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்த இவர் சிகிச்சை பலன் இன்றி இன்று காலமானார். திரையுலகினர், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். சினிமாவில் லதா … Read more

இந்திய வம்சாவளிக்கு மரண தண்டனை | Dinamalar

சிங்கப்பூர்:சிங்கப்பூரில் போதை மருந்து கடத்தல் வழக்கில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.சிங்கப்பூரில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கிஷோர் குமார் ரகுவன்,41,’ஹெராயின்’ போதைப் பொருளை ஒரு பையில் வைத்து, புங் ஆ கியாங் என்பவரிடம் கொடுத்துள்ளார். அப்போது இருவரையும் போலீசார் கைது செய்தனர். ஐந்து ஆண்டுகளுக்கு முன் நடந்த இந்த சம்பவத்தில் நேற்று சிங்கப்பூர் நீதிமன்றம், கிஷோருக்கு மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. புங் ஆ கியாங்கிற்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. சிங்கப்பூர் சட்டப்படி 15 … Read more

முன்னாள் எம்.பி சசிகலா புஷ்பா மீது வழக்குப்பதிவு; கணவர் பரபரப்பு புகார்!

அண்ணாநகரில் உள்ள வீட்டை, ‘சட்டவிரோத’ நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதாக, அதிமுக முன்னாள் எம்.பி., சசிகலா புஷ்பா மீது அவரது 2 வது கணவர் ராமசாமி அளித்த புகாரின் அடிப்படையில், ஜெ.ஜெ.நகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏஐசிடிஇ-யின் மேல்முறையீட்டுக் குழுவின் தலைமை அதிகாரியாகவும், டெல்லியின் லோக்-அதாலத் நீதிமன்றத்தின் இணை உறுப்பினராகவும் ராமசாமி உள்ளார். இதுதொடர்பாக அவர் அளித்த புகாரில், ஜனவரி 13 ஆம் தேதி அதிகாலையில் அண்ணாநகர் மேற்கில் உள்ள தங்களது வீட்டிற்கு மகளுடன் சென்றிருந்தேன். அப்போது, … Read more

சென்னை புத்தக கண்காட்சிக்கு இன்று முதல் ஆன்லைனில் முன்பதிவு.!

சென்னையில் புத்தகக் கண்காட்சிக்கு இன்று முதல் ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளலாம். ஜனவரியில் நடைபெறவிருந்த புத்தகக் கண்காட்சி கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. அதன் காரணமாக புத்தகக் கண்காட்சி தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. அதன் காரணமாக பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது தமிழக அரசு. இந்த நிலையில் சென்னையில் புத்தகக் கண்காட்சியை நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி … Read more