சாலையில் சென்ற லாரியின் டயர்கள் தானாக கழன்று ஓடும் சிசிடிவி காட்சி வெளியீடு <!– சாலையில் சென்ற லாரியின் டயர்கள் தானாக கழன்று ஓடும் சிசிடி… –>

திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகே நெடுஞ்சாலையில் இயற்கை எரிவாயு சிலிண்டர்களை எற்றி சென்ற லாரியின் இடதுபுற பின்பக்க டயர் தனியே கழன்று சாலையில் தானாக ஓடும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

புண்ணியவான்புரம் பகுதி அருகே சென்றுக்கொண்டிருந்த அந்த டாடா சரக்கு லாரியின் பின் பக்க டயர்கள் இரண்டும் தீடிரென தனியே கழன்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில், லாரி சென்ற வேகத்தில் தனியே கழன்ற ஒரு டயர் சாலையில் தானாக ஓடியது.

அந்த டயர் சுமார் 100 மீட்டர் வரை சென்று ஒரு தடுப்பில் மோதி நின்றதாக கூறப்படும் நிலையில், பிற வாகனங்கள் மீதோ பாதசாரிகள் மீதோ மோதாததால் விபத்து தவிர்க்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.