இலங்கையின் வடக்கு – கிழக்கு கரையோர பகுதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை(Photo)


நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு கரையோரங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடுகையில்,

”தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக் கடலில் நன்கு குறிக்கப்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.

இது திருகோணமலை கடற்பரப்பிலிருந்து தென் கிழக்கில் 470 கிலோமீற்றர் தொலைவில் நிலைகொண்டுள்ளதோடு, அடுத்த 24 மணித்தியாலங்களுக்குள் ஆழமான காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம்” இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த காலப்பகுதியில் கடற்படை மற்றும் கடற்தொழில் சமூகங்கள் அவதானமாக இருக்குமாறும் கடற்தொழிலாளர்கள் கடலுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Gallery

Gallery



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.