மரத்தின் மீது சிறிய வீடு அமைத்து வாழ்ந்து வரும் வெனிசுலா அகதி.! <!– மரத்தின் மீது சிறிய வீடு அமைத்து வாழ்ந்து வரும் வெனிசுலா … –>

வெனிசுலாவில் இருந்து கொலம்பியா வந்த அகதி ஒருவர் அந்நாட்டு எல்லையில் மரத்தின் கிளைகளிடையே சிறிய வீடு அமைத்து அதில் 4 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வருகிறார்.

கார்லோஸ் சான்செஸ் என்ற 55 வயது நபர், 2016-ல் கொலம்பியாவில் குடியேறும் நோக்கத்துடன் வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கொலம்பியாவில் சிறு சிறு வேலைகளை செய்யும் அவர், இந்த சிறிய வீட்டில் தங்கி வருவதுடன், வெனிசுலாவில் வாழ்ந்து வரும் தன் குடும்பத்தாருக்கு பணம் அனுப்பி வருகிறார்.

அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக வெலிசுலாவிலிருந்து சுமார் 60 லட்சம் பேர் வெளியேறி கொலம்பியாவில் குடியேறியுள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.