பாக்., மசூதியில் குண்டுவெடிப்பு; 30 பேர் பலி| Dinamalar

பெஷாவர்: பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகையின்போது திடீரென குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதில் 30 பேர் உயிரிழந்தனர், 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

பாகிஸ்தானின் வடமேற்கு நகரமான பெஷாவரில் உள்ள குச்சா ரிசல்தார் மசூதியில் இன்று (மார்ச் 4) வெள்ளிக்கிழமை தொழுகைக்காக ஏராளமானோர் கூடியிருந்தனர். அப்போது அங்கு சக்திவாய்ந்த வெடிகுண்டு வெடித்தது. இதில், 30 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பாக் மசூதியில்
மனித குண்டு
தாக்குதல்
30 பேர் பலி

இதனையடுத்து காயமடைந்தவர்களை ஆம்புலன்ஸ் மூலமாக லேடி ரீடிங் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர். குண்டுவெடிப்புக்கு இதுவரை எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இந்த சம்பவத்திற்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.