“எங்களுக்கு வந்த இந்த நிலைமை வேறு யாருக்கும் வரக்கூடாது" – கோகுல்ராஜின் தாயார்

கோகுல்ராஜ் கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட 5 பேருக்கும் தண்டனை பெற்றுத் தர வேண்டும் என கோகுல்ராஜின் தாயார் சித்ரா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கோகுல்ராஜ் ஆணவப் படுகொலை வழக்கில் முக்கிய குற்றவாளி யுவராஜுக்கு ஆயுள் முழுவதும் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. யுவராஜின் ஓட்டுநர் அருணுக்கும் ஆயுள் முழுவதும் சிறை தண்டனை விதித்து மதுரை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதுமட்டுமல்லாமல் கோகுல்ராஜ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மேலும் 8 பேருக்கும் ஆயுள் முழுவதும் சிறைதண்டனையும், குற்றவாளிகளான பிரபு, கிரிதர் ஆகிய இருவருக்கும் கூடுதலாக 5 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் விதித்திருக்கிறது.
இந்நிலையில் கோகுல்ராஜ் கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட 5 பேருக்கும் தண்டனை பெற்றுத் தர வேண்டும் என கோகுல்ராஜின் தாயார் சித்ரா வேண்டுகோள் விடுத்துள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.