"புனித வெள்ளியன்று டாஸ்மாக்கை மூட வேண்டும்" – தமிழக முதல்வருக்கு பீட்டர் அல்போன்ஸ் கடிதம்

இயேசுநாதர் சிலுவையில் அறையப்பட்ட புனித வெள்ளி தினத்தில் அரசு மதுபான கடைகளை மூட உத்தரவிடும்படி கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, சிறுபான்மையினர் நல ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் கடிதம் எழுதியுள்ளார்.
அதில், புனித வெள்ளி வரும் ஏப்ரல் மாதம்15 ஆம் தேதி அனுசரிக்கப்படவுள்ளதாகவும், இந்நாளில் கிறிஸ்தவர்கள் உண்ணா நோன்பிருந்தும், ரத்த தானம் செய்தும் இயேசு கிறிஸ்துவுக்கு அஞ்சலி செலுத்தி வருவதாக கூறியுள்ளார். எனவே, இயேசுவின் மகத்தான தியாகத்தை அங்கீகரிக்கும் வகையில் புனித வெள்ளியன்று டாஸ்மாக் கடைகளை மூட அரசு உத்தரவிட வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.