இளம்பெண் பலாத்கார புகார்: மலையாள இயக்குனர் கைது

திருவனந்தபுரம்: மலையாள இயக்குனர் மீது இளம்பெண் பலாத்கார புகார் அளித்தார். இதை தொடர்ந்து அந்த இயக்குநர் கைது செய்யப் பட்டார். நடிகர் சன்னி வெய்ன், படவெட்டு என்ற படத்தை தயாரிக்கிறார். இந்தப் படத்தை புதுமுக இயக்குனரான லிஜுகிருஷ்ணா என்பவர் டைரக்ட் செய்து வருகிறார். இந்நிலையில் கொச்சியை சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியரான ஒரு இளம்பெண், டைரக்டர் லிஜுகிருஷ்ணா தன்னை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி பல இடங்களுக்கு அழைத்துச் சென்று பலாத்காரம் செய்ததாக கூறி மலையாள சினிமா பெண் கலைஞர்கள் சங்கத்தில் புகார் செய்தார். பெண் சினிமா கலைஞர்கள் சங்கத்தினர் இந்தப் புகாரை கொச்சி போலீஸ் கமிஷனரிடம் கொடுத்தனர்.  இந்நிலையில் போலீஸ் நடத்திய விசாரணையில் டைரக்டர் லிஜுகிருஷ்ணா கண்ணூரில் படப்பிடிப்பில்  இருப்பது தெரியவந்தது. கண்ணூர் விரைந்து சென்ற போலீசார் படப்பிடிப்பு தளத்தில் வைத்து லிஜுகிருஷ்ணாவை கைது செய்து கொச்சிக்கு அழைத்து சென்றனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். டைரக்டர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து படவெட்டு படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.