தமிழகத்தில் 6-9 ஆம் வகுப்புகளுக்கு மே மாதம் தேர்வு..!

6 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இந்த ஆண்டு மே மாதத்தில் தேர்வு நடத்தப்படும் என்றும் அடுத்த ஆண்டில் இருந்து வழக்கம் போல ஏப்ரலிலேயே தேர்வு நடத்தி முடிக்கப்படும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.

சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றபின் பேட்டியளித்த அவர், அரசு பள்ளிகளில் இந்த ஆண்டு கூடுதலாக மாணவர்கள் சேர்ந்துள்ள நிலையில் அதற்கேற்ப ஆசிரியர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது தொடர்பாக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மேலும், அரசுப் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகங்களில் திமுகவினர் தலையீடு இருந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.