அப்பாவி உக்ரேனிய பெண்மணிக்கு ரஷ்ய துருப்புகளால் ஏற்பட்ட கொடூரம்: வெளியான புகைப்படம்


தனது தாயாருக்காக மருந்து வாங்கச் சென்ற உக்ரைன் பெண்மணி ஒருவர் ரஷ்ய டாங்கியால் சுடப்பட்டு மொத்தமாக உடல் சிதறி பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உக்ரைன் தலைநகரில் மருத்துவ உதவியாளராக பணியாற்றிவருபவர் 31 வயதான Valeriia Maksetska. இவரே ரஷ்ய துருப்புகளால் டாங்கியால் சுடப்பட்டு, உடல் சிதறி பலியானவர்.

இவருடன், அவரது தாயாரும் சாரதியும் குறித்த சம்பவத்தில் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளனர்.
தலைநகர் கீவ் அருகாமையில் உள்ள கிராமம் ஒன்றிலேயே குறித்த பகீர் சம்பவம் அரங்கேறியுள்ளது.

ரஷ்ய படையெடுப்புக்கு பின்னர், போரில் காயம்பட்டவர்களுக்கு மருத்துவ உதவிகளை முன்னெடுத்து வந்துள்ளார் Valeriia Maksetska.
இந்த நிலையில் நோய்வாய்ப்பட்ட தமது தாயாருக்கு மருந்துகள் தேவைப்பட, கார் ஒன்றில் இவர்கள் இருவரும் சாரதியும் என மூவரும் நகருக்கு புறப்பட்டு சென்றுள்ளனர்.

இதனிடையே, ரஷ்ய டாங்கிகள் நகருக்குள் நுழைந்து, அணிவகுத்து செல்வதை இவர்கள் காண நேர்ந்துள்ளது.
ரஷ்ய துருப்புகளின் அணிவகுப்பு கடந்து செல்லும் வரையில் இவர்கள் மூவரும் காருக்குள் பொறுமையாக காத்திருந்துள்ளனர்.

ஆனால் ரஷ்ய வீரர் இவர்கள் மீது டாங்கியால் சுட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் Valeriia Maksetska உட்பட மூவரும் ஒரே நொடியில் உடல் சிதறி பலியாகியுள்ளனர்.

மேலும், Donetsk பகுதியில் ரஷ்ய குண்டுவீச்சில் நூலிழையில் உயிர் தப்பிய Valeriia Maksetska கீவ் நகருக்கு குடிபெயர்ந்துள்ளார் எனவும், ஆனால் தற்போது கீவ் நகரில் வைத்து ரஷ்ய துருப்புகளிடம் சிக்கியுள்ளார் என அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.

ரஷ்ய துருப்புகளின் இந்த கொடூர நடவடிக்கை அப்பகுதி மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.