தவறுதலாக பாகிஸ்தான் மீது ஏவுகணை வீசியதற்கு இந்தியா வருத்தம்

டில்லி

பாகிஸ்தான் மீது தவறுதலாக ஏவுகணை ஏவப்பட்டதாக தெரிவித்த இந்திய அரசு அதற்கு வருத்தம் தெரிவித்துள்ளது.

கடந்த 9 ஆம் தேதி அன்று இந்திய ராணுவம் ஏவுகணை பராமரிப்பு பணி நடத்தி உள்ளது.  அப்போது ஒரு ஏவுகணை பாகிஸ்தான் பகுதிக்குச் செலுத்தப்பட்டுள்ளது.  இது உலக அளவில் ப்ரரபரப்பை ஏற்படுத்தியது.  இது குறித்து இன்று இந்திய அரசின் பாதுகாப்புத்  துறை விளக்கம் அளித்துள்ளது.

இந்திய அரசு,

”கடந்த 2022 ஆம் வருடம் மார்ச் மாதம் 9 ஆம் தேதி அன்று வழக்கமான ஏவுகணை பராமரிப்பு பணி நடத்தப்பட்டது.  அப்போது ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஒரு ஏவுகணை தவறுதலாக வெடித்தது.   இது குறித்து இந்திய அரசு மேல்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

தவறுதலாக ஏவப்பட்ட அந்த ஏவுகணை பாகிஸ்தான் பகுதியில் விழுந்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது   இந்த நிகழ்வுக்கு ஆழ்ந்த வருத்தம் தெரிவிக்க்த்துக் கொள்கிறோம்.  இந்த ஏவுகணையால் எவ்வித இழப்போ விளைவோ ஏற்படவில்லை என்பது சற்றே நிம்மதி அளிக்கிறது”

என விளக்கம் அளித்துள்ளது.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.