யார் தவறு செய்தாலும் தண்டனை என்பதை உறுதி செய்யுங்கள்’ ஐ.ஏ.எஸ்- ஐ.பி.எஸ் மாநாட்டில் ஸ்டாலின் கட்டளை

Tamilnadu CM Stalin Speech : யார் தவறு செய்தாலும் தண்டனை என்பதை உறுதி செய்யுங்கள் என்று ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் கட்டளையிட்டுள்ளார்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில், மாவட்ட ஆட்சியர், ஐபிஎஸ், வனத்துறை, அலுவலர்கள் மாநாடு சென்னை தலைமை செயலகத்தின் இன்று தொடங்கியது. 3 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் முதல் நாளை உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின் கூறுகையில்,

நமது மாநிலத்தில் தற்போது நிலவி வரும் சட்டம் ஒழுங்கு சூழல் குறித்து, அவற்றை மேலும் மேம்படுத்துவதற்காக பல்வேறு ஆலோசனைகள இந்த பணியில் நீங்கள் சந்தித்துக்கொண்டிருக்கும் பல்வேறு பிரச்சனைகள், மற்றும் சவால்கள் குறித்து சுறுக்கமாகவும் அதே நேரத்தில் தெளிவாகவும் எடுத்து கூறியுள்ளீர்கள். 

சட்டம் ஒழுங்கு என்பது காவல்துறை பணி மட்டும் அல்ல மேலும், இது ஒரு துறையை மட்டும் பாதிக்கக்கூடிய விஷயம் மட்டும் அல்ல, நமது மாநிலத்தின் மக்களுடைய வாழ்க்கைத்தரம், பொருளாதார முன்னேற்றம், அடுத்த தலைமுறையின் கல்வி, வேலைவாய்ப்பு, என நமது சமூதாயத்தின் ஒவ்வொரு பரினாமத்தையம் நிர்ணையிக்கக்கூடிய முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை இந்த தருணத்தின் உங்களுக்கு மீண்மு் வலியுறுத்துகிறேன்

மாவட்ட ஆட்சித்தலைவர்களையும், காவல்துறை கண்காணிப்பாளர் அவர்களையும், நான் பணிவோடு கேட்டுக்கொள்ள விரும்புவது, உங்கள் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு தொடர்பான கூட்டத்தை மிகுந்த கவனத்தோடு தவறாமல் நடத்த வேண்டும். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பாதிப்பு காரணமாக சரிவர கூட்டத்தை நடத்த முடியவில்லை. எனவே இந்த நிலை மாற்றப்பட வேண்டும்

மேலும் வாரந்தோறும் சட்டம் ஒழுறங்கு பிரச்சினை குறித்து நுன்னறிவு பிரிவைச்சார்த்த தகவல்கள் குறித்து ஆலோசனையும் தவறாமல் நடத்த வேண்டும். நீங்கள் உங்கள் மாட்டத்தில் ஒரு டேஷ்போர்டு உருவாக்கிக்கொள்ள வேண்டும். மாதந்தோறும் நடத்தப்படும் சட்டம் ஒழுங்கு தொடர்பான கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் முறையாக நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பது குறித்து அடுத்து வரக்கூடிய கூட்டத்தில், ஆராய்ந்து முழுமையாக தீர்வு காண வேண்டும். சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளும் குற்றங்களும் நிறைந்த பின்பு அவற்றை தீர்ப்பதற்கும் திறனாய்வு செய்வதற்கும், எடுக்கப்படக்கூடிய நடவடிக்கைகளை விட அவை நிகழாமல் தடுப்பதற்கு உண்டான முயற்சிகள தான் மக்களுக்கு மிகுந்த பயனை அளிக்கும்.

எனவே நமது வெற்றி என்பது சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளை தீர்த்து வைப்பதோ குற்றங்களை கண்டுபிடிப்பதில் இருப்பதை விட அவை மக்களை பாதிக்காத வகையிலே தடுப்பதில் தான் இருக்கிறது என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும். நான் ஆட்சிக்கு வந்தவுடன், தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்பதை சொல்லால் மட்டுமல்ல செயலாலும் தொடர்ந்து பலமுறை செய்து காட்டியிருக்கிறேன்.

வருங்காலத்திலும் இந்த நிலை தொடர வேண்டும். தொடர்வதை நீங்கள் உறுதி செய்ய வேண்டும். இந்த ஆட்சியில் மதிப்பீடு என்பது சட்டம் ஒழுங்கினை பராமரிப்பதில் தான் உள்ளது என்பதை நீங்கள் அனைவரும் முழுமையாக உணர்ந்து செயல்பட வேண்டும் என்று உங்கள் அனைவரையும் மீண்டும் ஒருமுறை கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.