உச்சநீதிமன்ற பிணை ஆணை சிறைச்சாலை அதிகாரிகளுக்கு கிடைப்பதில் தாமதம் ; மீண்டும் வீடு திரும்பினார் பேரறிவாளன்

பேரறிவாளனுக்கு உச்சநீதிமன்றம் வழங்கிய பிணை ஆணையின் நகல் புழல் சிறைச்சாலை அதிகாரிகளை வந்தடையாததால் அவர் தொடர்ந்து பரோலில் இருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு மே மாதம் முதல் பரோலில் இருக்கும் பேரறிவாளனுக்கு, புதன்கிழமை உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் வழங்கப்பட்டது. இதையடுத்து தமிழக அரசு வழங்கிய பரோலை ரத்து செய்ய, பேரறிவாழன் திருப்பத்தூரில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் புழல் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

ஆனால் உச்சநீதிமன்ற ஆணையின் நகல் இன்னும் புழல் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு கிடைக்காததால் பேரறிவாளன் மீண்டும் வீடு திரும்பினார்.

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.