சவுதியில் ஒரே நாளில் 81 பேருக்கு மரண தண்டனை

ரியாத்: சவுதி அரேபியாவில், பல்வேறு பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட 81 குற்றவாளிகளுக்கு ஒரே நாளில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து சவுதி அரேபிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது, அல்கொய்தா , ஹூதி ஐ.எஸ்., போன்ற பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு வைத்து பல்வேறு கொடுங்குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக 81 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது .
நீதிமன்றத்தில் 13 நீதிபதிகள் முன் நடந்த விசாரணையில், 81 பேரும் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டு, மரண தண்டனை வழங்கப்பட்டது. இதையடுத்து ஒரே நாளில் 81 பேருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இவர்களில் 73 பேர் சவுதி அரேபியர்கள், ஏழு பேர் ஏமன் நாட்டினர், ஒருவர் சிரியா நாட்டைச் சேர்ந்தவர். இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.