நாளை முதல் மீண்டும் முழு ஊரடங்கு – அரசு எடுக்கும் அதிரடி முடிவு?

கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருவதை அடுத்து மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அண்டை நாடான, சீனாவின் வூகான் நகரில், கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில், கோவிட் – 19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்று பரவியது. இது, இந்தியா, அமெரிக்கா, இத்தாலி, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு பரவி கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. கொரோனா தொற்றுக்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு விட்டாலும் அது பல்வேறு வகைகளில் உருமாற்றம் அடைந்து வருவது பொது மக்களை அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், மேற்கு ஐரோப்பிய நாடான ஆஸ்திரியாவில், கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 9 ஆம் தேதி 47,795 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில், கடந்த 10 ஆம் தேதி, 49,323 பேருக்கு கொரோனா பரவல் உறுதி செய்யப்பட்டு உள்ளது.

அரசு ஊழியர்களுக்கு செம குட் நியூஸ் – வெளியானது சூப்பர் அறிவிப்பு!

கொரோனா பரவல் அதிகரித்து வந்தாலும், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை குறைவாக தான் உள்ளது. எனினும் பொது மக்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஆஸ்திரியா
நாட்டின் “சுதந்திர தினம்” நாள் அண்மையில் கடைபிடிக்கப்பட்டது. இதன் காரணமாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது.

ஆஸ்திரியா நாட்டில், கொரோனா பரவல் காரணமாக கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இரண்டு வாரங்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போது மீண்டும் கொரோனா பாதிப்பு உயர்ந்து வருவதால், முழு ஊரடங்கு அலம்படுத்தப்படுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.