நுால் வெளியீட்டு விழா| Dinamalar

புதுச்சேரி : மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி மையத்தில் நுால் வெளியீடு மற்றும் தொல்காப்பியர் விருது வழங்கும் விழா நடந்தது.விழாவில் ஆசிரியர் காண்டீபன் வரவேற்றார். கவிஞர் ராதே தலைமை தாங்கினார். கஜேந்திரன், மதன்குமார் முன்னிலை வகித்தனர். கவிஞர் கோவிந்தராசு நோக்கவுரையாற்றினார்.

ராமதாஸ் காந்தி எழுதிய ‘ஞானச்சுடர் மணிமேகலை’ என்ற நுாலை, பொதுப்பணித் துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் வெளியிட, வைத்தியநாதன் எம்.எல்.ஏ., தொழிலதிபர் அருள்செல்வன் ஆகியோர் முதல் பிரதியை பெற்றுக் கொண்டனர். ரவிக்குமார், வீரட்டீசுரன் வாழ்த்தி பேசினார். பேராசிரியர் இளங்கோ, நுாலினை திறனாய்வு செய்தார். தொடர்ந்து நடந்த விழாவில் ரத்தினவெங்கடேசனுக்கு, தொல்காப்பியர் விருதை சபாநாயகர் செல்வம் வழங்கினார். விழா ஏற்பாடுகளை கண்ணதாசன் இலக்கிய கழக நிர்வாகிகள் செய்திருந்தனர். செந்தில்குமார் நன்றி கூறினார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.