திருச்சியில் சட்டத்திற்கு புறம்பாக வளர்க்கப்பட்ட 500 பச்சைக்கிளிகள் மீட்பு.!

திருச்சி மாவட்டத்தில் சட்டத்திற்குப் புறம்பாக வீடுகளில் வளர்க்கப்பட்ட 500க்கும் மேற்பட்ட பச்சைக்கிளிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

கீழப்புதூர், குருவிக்காரன் தெரு பகுதியில் உள்ள வீடுகளின் முன்பு கூண்டு அமைத்து கிளிகள் மற்றும் குருவிகள் வளர்த்து விற்பனை செய்யப்பட்டு வருவதாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து வனத்துறை அதிகாரிகள் அங்கு அதிரடி சோதனை மேற்கொண்டு  600க்கும் மேற்பட்ட கிளிகள், 100க்கும் மேற்பட்ட முனியாஸ் குருவிகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.