விடுதியில் தங்கி பயிலும் பள்ளி மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வார்டன் கைது

திருவண்ணாமலை மாவட்டம் தாளவாடியில் விடுதியில் தங்கி பயிலும் பள்ளி மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, விடுதி காப்பாளர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டான்.

தூத்துக்குடியைச் சேர்ந்த துரைப்பாண்டியன் என்பவன் கடந்த 2 ஆண்டுகளாக அப்பகுதியில் உள்ள ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் விடுதி காப்பாளராக பணியாற்றி வரும் நிலையில், அவன் சில மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து பாதிக்கப்பட்ட 8 மாணவர்கள் சைல்டு ஹெல்ப் லைன் எண்ணுக்கு தகவல் கொடுத்ததை அடுத்து, விடுதிக்கு சென்ற போலீசார் துரைப்பாண்டியனிடம் விசாரித்த போது அவன் மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததை ஒப்புக்கொண்டுள்ளான். இதையடுத்து துரைப்பாண்டியனை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.