கனடாவில் சாலை விபத்தில் சிக்கி ஐந்து இந்திய மாணவர்கள் பலி

டொரன்டோ: கனடாவில் சாலை விபத்தில் சிக்கி ஐந்து இந்திய மாணவர்கள் பலியாகினர். கனடாவின் ஒன்டோரியொ நெடுஞ்சாலையில் கடந்த சனிக்கிழமை இந்த விபத்து நடந்துள்ளது.

இதனை கனடாவுக்கான இந்திய தூதர் அஜய் பிஸாரியா உறுதிப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “நெஞ்சைப் பிளக்கும் சோகச் சம்பவம் கனடாவில் நடந்துள்ளது. டொரன்டோ அருகே சனிக்கிழமை நடந்த சாலை விபத்தில் ஐந்து இந்திய மாணவர்கள் இறந்தனர்.

— Ajay Bisaria (@Ajaybis) March 14, 2022

இருவர் மருத்துவமனையில் உள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். டொரன்டோவில் உள்ள இந்தியக் குழு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுடன் தொடர்பில் இருந்து தேவையான உதவிகளை மேற்கொண்டு வருகிறது” என்று பதிவிட்டுள்ளார்.

மாணவர்கள் சென்ற வேன், முன்னே சென்ற ட்ராக்டர் ட்ரெய்லரில் மோதி விபத்து நடந்துள்ளதாகத் தெரிகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.