குழந்தைகளுடன் தற்கொலைக்கு முயன்ற பெண்.. குழந்தை பலி… காவல்துறை தீவிர விசாரணை…!

குழந்தைகளுடன் தாய் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

சேலம் மாவட்டம் கொண்டலம்பட்டி பகுதியை சேர்ந்தவர் தியாகராஜன். மாற்று திறளானியான அவர் அங்கு கூலி தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவருக்கு ரேவதி என்ற மனைவியும் 2 மகள்களும் உள்ளனர். இந்நிலையில் ரேவதி வீட்டில் இருந்த குருணை மருந்தை கலக்கி குழந்தைகளுக்கு கொடுத்துவிட்டு தானும் குடித்துள்ளார்.

 இதில் வரும் மயங்கிக் கிடந்தனர் இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர்,  உடனடியாக அவர்களை மீட்டு மருத்துமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது மகள் வேதிகாஸ்ரீ இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

 மேலும் ரேவதி மற்றும் ஜனனி ஆகிய இருவருக்கும் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர் எதற்காக தற்கொலைக்கு முயற்சித்ததற்கான காரணம் குறித்து  தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.