தமிழகத்தின் உள் மாவட்டங்களில் இன்றும், நாளையும் இயல்பைவிட வெப்பநிலை அதிகரிக்கும்

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் வருகிற 16-ந் தேதி முதல் மூன்று நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்த செய்திக்குறிப்பில், தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் இன்றும், நாளையும் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் எனவும், மேலும், இந்த இரு நாட்களுக்கு தமிழகத்தின் உள் மாவட்டங்களில் பகல்நேர அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 1 டிகிரி முதல் 2 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக் கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.

16, 17,18ஆகிய மூன்று நாட்களுக்கு தேனி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, நீலகிரி மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனக் கூறப்பட்டுள்ளது. சென்னையில் இரு நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் மட்டுமே காணப்படும் எனவும், மழைக்கு வாய்ப்பில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.