எம்.ஜி.ஆர். சிலையை பாதுகாப்பான இடத்தில் வைக்க முதல்வரிடம் ஓம்சக்தி சேகர் கோரிக்கை| Dinamalar

புதுச்சேரி-வில்லியனுார் பைபாசில் உள்ள எம்.ஜி.ஆர்., சிலையை பாதுகாப்பான இடத்தில் வைக்க வேண்டும் என முன்னாள் எம்.எல்.ஏ., ஓம்சக்தி சேகர் முதல்வரை சந்தித்து கோரிக்கை வைத்தார்.வில்லியனுார் பைபாஸ் நடுவில் எம்.ஜி.ஆர்., சிலை அமைந்துள்ளது. இச்சிலை, வாகன போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. இதனை அகற்றி, வேறு இடத்தில் வைக்க முடிவு செய்யப் பட்டது. அதிகாரிகள் மெத்தனத்தால் இப்பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது.இந்நிலையில், மேற்கு அ.தி.மு.க., மாநில செயலாளர் ஓம்சக்தி சேகர் நேற்று முதல்வர் ரங்கசாமியை சந்தித்து பேசினார்.அப்போது, வில்லியனுார் பைபாசில் உள்ள எம்.ஜி.ஆர்., சிலையை பாதுகாப்பான இடத்தில் வைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.முதல்வர் ரங்கசாமி, இது தொடர்பாக பொதுப்பணித் துறையின் அறிக்கையை பெற்ற பிறகு, எம்.ஜி.ஆர். சிலையை ஓரமாக வைப்பதா அல்லது ரவுண்டானாவில் வைப்பதா என முடிவு செய்யப்படும் என தெரிவித்தார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.