திடீர் திருப்பம்! உக்ரைன் தலைநகரை கைப்பற்ற ரஷ்யாவிடம் ஆள்பலம் இல்லை… முக்கிய தகவல்


உக்ரைன் தலைநகரை ரஷ்யா கைப்பற்றுவது தொடர்பிலான முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

உக்ரைன்-ரஷியா இடையிலான போர் தொடர்ந்து தீவிரம் அடைந்து வருகிறது. இன்று 19 நாட்களாக தாக்குதல் தொடர்கிறது.

தலைநகர் கீவ் தான் குறி

உக்ரைன் தலைநகர் கீவை ரஷ்ய படையினர் நெருங்குவதாகவும், நகரை சுற்றி வளைத்துவிட்டதாகவும் தொடர்ந்து தகவல்கள் வந்த வண்ணம் இருந்தது.
இதனால் கீவ்வை ரஷ்யா கைப்பற்றிவிடுமா என்ற கேள்வி எழுந்து வந்தது.

இது குறித்து அமெரிக்க செனட்டரும், செனட் புலனாய்வுக் குழுவின் துணை தலைவருமான மார்கோ ரூபியோ ஒரு அதி முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார்.

மார்கோ ரூபியோ கூறுகையில், தற்போது உக்ரைன் தலைநகர் கீவை கைப்பற்றுவதற்கான ஆள்பலம் ரஷ்யாவிடம் இல்லை.

மன வலிமை இல்லை

இதோடு ரஷ்ய படைகளுக்கு மன வலிமையும் இல்லை என கூறியுள்ளார்.
இதன் மூலம் உக்ரைன் கை ஓங்குவதாகவே பார்க்கப்படுகிறது.

ஏனெனில் தலைநகரை கைப்பற்ற ரஷ்யா வெகுநாட்களாகவே முயன்று வரும் நிலையில் இந்த தகவலை மார்கோ வெளியிட்டுள்ளது முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.