தோல்வியில் முடிந்தது வடகொரியா ஏவுகணை சோதனை

சியோல் : வட கொரியா நேற்று ஏவிய ஏவுகணை சோதனை தோல்வியில் முடிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் பொருளாதார தடைகளை மீறி கிழக்காசிய நாடான வட கொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. கடந்த பிப்ரவரியில் வட கொரியா ஏவுகணை சோதனையை நடத்தியது. இதன் மூலம் இந்த ஆண்டு இதுவரை வட கொரியா எட்டு ஏவுகணை சோதனைகளை நடத்தியுள்ளது.

இந்த நிலையில், நேற்று வடகொரியா ஏவிய ஏவுகணை நடுவானில் வெடித்து சிதறியதாக தென்கொரிய ராணுவம் செய்தி வெளியிட்டுள்ளது.
இது குறித்து தென்கொரியா வெளியிட்டுள்ள செய்தியில், வடகொரிய தலைநகர் பையோங்காங் சர்வதேச விமான நிலையம் அருகே வடகொரியா ஏவிய ஏவுகணை 20 கி..மீ. உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது நடுவானில் வெடித்து சிதறியது, வெடித்துச்சிதறிய ஏவுகணை பற்றிய தகவல்கள் தெரியவில்லை. எனினும் இந்த ஏவுகணை சோதனை தோல்வியில் முடிந்தது. இவ்வாறு அதில் கூறியுள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.