மார்ச் 27ம் தேதி முதல் ”தூத்துக்குடி – பெங்களூரு இடையே தினசரி பயணிகள் விமான சேவை”

தூத்துக்குடி – பெங்களூரு இடையே வரும் மார்ச் 27ம் தேதி முதல் தினசரி பயணிகள் விமான சேவை தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது வாரத்திற்கு மூன்று நாட்களுக்கு மட்டும் தூத்துக்குடி – பெங்களூரு இடையே விமானங்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், தூத்துக்குடி விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணியன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

தூத்துக்குடி துறைமுகத்தில் நடைபெற்ற பிரதமரின் கதி சக்தி திட்ட துவக்க விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர், தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்கப் பணிகளும் ரன்வே அமைக்கும் பணிகளும் இன்னும் இரண்டு மாதங்களில் நிறைவடைந்துவிடும் என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.