மது போதையில் காவலரிடம் மல்லுக்கட்டிய மது போதை ஆசாமி.. சுற்றி வளைத்து நையப்புடைத்த ஓட்டுநர், நடத்துநர்கள்..

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பேருந்து நிலையத்தில் காவலர் ஒருவரிடம் மல்லுக்கட்டிய மது போதை ஆசாமியை, போக்குவரத்து ஊழியர்கள் சுற்றிவளைத்து நையப் புடைத்த வீடியோ வைரலாகி வருகிறது.

நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்தில் மது போதையில் ஆசாமி ஒருவர் பயணிகள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் உள்ளிட்டோரை மிரட்டுவதும் கூச்சலிடுவதுமாக அட்டகாசம் செய்து கொண்டிருந்தார். அங்கு ரோந்துப் பணியில் இருந்த காவலர் ஒருவர் அவரை அப்புறப்படுத்த முயன்றபோது, போதை ஆசாமி அவரை அடிக்கச் செல்வது போல கையை ஓங்கி எகிறிக் குதித்து டான்ஸ் ஆடி வித்தை காட்டினார்.

போதை ஆசாமியின் சேட்டையைப் பார்த்துக் கொண்டிருந்த பேருந்து ஓட்டுநர்களும் நடத்துநர்களும் அவரை மிரட்டி விரட்ட முயன்றனர். அப்போதும் போதை ஆசாமி அடங்காமல் சத்தம்போட்டதால், அடித்து, உதைத்து அங்கிருந்து வெளியேற்றினர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.